ஆப்நகரம்

ஊராட்சி சபைக் கூட்டத்தை ஒத்திவைத்த திமுக!

சென்னை: சட்டமன்ற கூட்டத்தொடர் காரணமாக ஊராட்சி சபைக் கூட்டத்தை திமுக ஒத்திவைத்துள்ளது.

Samayam Tamil 26 Dec 2018, 10:05 pm
திமுக தலைமைக் கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்களின் மனங்களை வெல்வோம் என்ற மூன்று முத்தான முழக்கங்களை முன்வைத்து தான் நமது செயல்பாடுகள் இனி அமைய வேண்டும் என்று தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Samayam Tamil DMK Office


டிசம்பர் 24ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் - சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் வரும் ஜனவரி 3 முதல் பிப்ரவரி 10 வரை 12,617 ஊராட்சிகளிலும் திமுக சார்பில் ஊராட்சி சபைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் 2019 ஜனவரி 2ஆம் தேதி தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்க உள்ளது. எனவே ஊராட்சி சபைக் கூட்டம் தொடங்கப்படும் தேதி ஜனவரி 8 முதல் 17ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி