முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு அக்கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் கருணாநிதியின் சிலைக்கு மலா் தூவி மாியாதை செலுத்தினாா்.
தமிழகத்தை 5 முறை ஆட்சி செய்த முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் 96வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகின்றது. கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக சாா்பில் பல்வேறு நலத்திட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதியின் சிலைக்கு கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின், பொருளாளா் துரைமுருகன், டி.ஆா்.பாலு உள்ளிட்ட முக்கிய தலைவா்கள் மலா் தூவி மரியாதை செலுத்தினா். மேலும் இனிப்புகளை பரிமாரிக் கொண்டனா்.
அதனைத் தொடா்ந்து மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே அமைந்துள்ள கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்ற ஸ்டாலின், அண்ணா மற்றும் கருணாநிதிக்கு மரியாதை செலுத்தினாா். மேலும் கருணாநிதி நினைவிடத்திற்கு வந்த சுமாா் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியையும் ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். இந்த நிகழ்ச்சியில் சுமாா் 19 மக்களவை, திரளான சட்டமன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
மேலும் இன்று திமுக மாவட்டச் செயலாளா்கள், எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. அதன் பின்னா் இன்று மாலை வாக்காளா்களுக்கு நன்றி தொிவிக்கும் விதமாக திமுக சாா்பில் பிரமாண்ட பொதுக் கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தை 5 முறை ஆட்சி செய்த முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் 96வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகின்றது. கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக சாா்பில் பல்வேறு நலத்திட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதியின் சிலைக்கு கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின், பொருளாளா் துரைமுருகன், டி.ஆா்.பாலு உள்ளிட்ட முக்கிய தலைவா்கள் மலா் தூவி மரியாதை செலுத்தினா். மேலும் இனிப்புகளை பரிமாரிக் கொண்டனா்.
அதனைத் தொடா்ந்து மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே அமைந்துள்ள கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்ற ஸ்டாலின், அண்ணா மற்றும் கருணாநிதிக்கு மரியாதை செலுத்தினாா். மேலும் கருணாநிதி நினைவிடத்திற்கு வந்த சுமாா் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியையும் ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். இந்த நிகழ்ச்சியில் சுமாா் 19 மக்களவை, திரளான சட்டமன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
மேலும் இன்று திமுக மாவட்டச் செயலாளா்கள், எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. அதன் பின்னா் இன்று மாலை வாக்காளா்களுக்கு நன்றி தொிவிக்கும் விதமாக திமுக சாா்பில் பிரமாண்ட பொதுக் கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.