ஆப்நகரம்

செந்தில் பாலாஜி தலைமையில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திமுக-வில் இணைந்தனர்- ஸ்டாலின் பெருமிதம்

கரூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமமுக, அதிமுக ஆகிய கட்சிகளில் இருந்து கிட்டத்தட்ட 30,425 தொண்டர்கள் திமுகவில் இணைந்துள்ளனர் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 28 Dec 2018, 10:23 am
கரூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமமுக, அதிமுக ஆகிய கட்சிகளில் இருந்து கிட்டத்தட்ட 30,425 தொண்டர்கள் திமுகவில் இணைந்துள்ளனர் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil கரூர் பொதுக்கூட்டம்.


அம்முக, அதிமுக ஆகிய மாற்றுக் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் திமுகவில் இணையும் விழா இன்று கரூரில் மாபெரும் பொதுக்கூட்டம் நடந்தது. திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த பொதுக்கூட்டத்தில், அண்மையில், திமுக கட்சியில் இணைந்த செந்தில் பாலாஜி உள்பட மற்ற திமுக பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

Also Read This:DMK Karur Meeting: மாற்றுக் கட்சியினர் திமுக.,வின் இணையும் விழாவில் முக ஸ்டாலின் பேச்சு

Also Read This: செந்தில் பாலாஜி ஒரு பச்சோந்தி- முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

அப்போது பேசிய ஸ்டாலின் கூறுகையில், திமுக.,வின் பல்வேறு பதவிகளில் இருந்த போது கரூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்த நான், இப்போது திமுக கழகத்தின் தலைவராக வந்துள்ளேன். அடுத்த முறை வரும் போது எப்படி வர வேண்டும் என்பதற்கான உணர்வை வெளிப்படுத்தியுள்ளார்.

நம்முடைய அன்பிற்குரிய சகோதரர் செந்தில் பாலாஜி இந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தை கூட்டியிருக்கிறார். நம்மை வெல்ல யாரும் இல்லை, இனி எவரும் பிறக்கவும் முடியாது. தோழர் செந்தில் பாலாஜி ஏற்கனவே சென்னையில், கட்சி தலைமை அலுவலகத்தில் திமுகவில் சேர்ந்திருந்த நிலையில், தற்போது பல கட்சிகளிலிருந்து திமுக என்ற தாய் கட்சியில் வந்து சேர வந்துள்ளனர். நீங்கள் வேறு கட்சியிலிருந்து பிரிந்து வந்து சேர வில்லை. ஏற்கனவே இருந்த கட்சியில் வந்து சேர்ந்திருக்கிறீர்கள் என்று கூறியுள்ளார்.

மேலும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், மதிமுக, அதிமுக ஆகிய மாற்றுக் கட்சிகளில் இருந்து கிட்டத்தட்ட 30,425 தொண்டர்கள் தற்போது திமுகவில் இணைந்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி