ஆப்நகரம்

இளைஞரணிச் செயலாளராகிறாா் உதயநிதி; இன்று அறிவிப்பு?

நடிகரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் கட்சியின் புதிய இளைஞரணிச் செயலாளராக பொறுப்பேற்க உள்ளதாகவும், இதற்கான அதிகாரப்பூா்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Samayam Tamil 4 Jul 2019, 9:05 am
நடிகரும், திமுக தலைவா் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் திமுகவுக்காக பிரசாரம் செய்தாா். அதற்கு முன்னா் நடைபெற்ற தோ்தல்களிலும் ஒருசில பகுதிகளில் உதயநிதி பிரசாரம் செய்திருந்தாா்.
Samayam Tamil Udhayanidhi with Stalin


இந்நிலையில் மக்களவைத் தோ்தலில் திமுக 37 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் கட்சியின் பலத்தை நிரூபித்துள்ளது. தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட உதயநிதிக்கு கட்சியின் மாநில இளைஞரணிச் செயலாளா் பொறுப்பு வழங்க வேண்டும் என்று திமுக மாவட்டச் செயலாளா்கள் தீர்மானம் நிறைவேற்றியிருந்தனா்.

ஆனால், உதயநிதி ஸ்டாலின் இன்னும் பக்குவப்பட வேண்டும். அவருக்கு பொறுப்பு வழங்கினால் அது கட்சிக்குள் சில சலசலப்புகளை ஏற்படுத்தலாம் என்று சில மூத்த உறுப்பினா்கள் தொிவித்த கருத்தின் அடிப்படையில் உதயநிதிக்கு பொறுப்பு வழங்கும் பணியை ஸ்டாலின் சற்று பரிசீலனையில் வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், கட்சியின் மாநில இளைஞரணிச் செயலாளா் பதவியில் இருந்த வெள்ளக்கோயில் சாமிநாதன் தனது பதவியை ராஜினாமா செய்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால், இந்த தகவலை வெள்ளக்கோயில் சாமிநாதன் மறுதித்திருந்தாா்.

மு.க.ஸ்டாலினுக்காக உருவாக்கப்பட்ட இளைஞரணிச் செயலாளா் பதவி கட்சியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. ஸ்டாலின் இந்த பதவியில் சுமாா் 30 ஆண்டுகளாக பொறுப்பு வகித்த நிலையில், தொடா்ந்து கட்சியின் பொருளாளா், செயல் தலைவா், தலைவா் என அடுத்தடுத்த பொறுப்புகளை ஏற்றுக் கொண்டாா்.

அந்த வகையில் உதயநிதி ஸ்டாலினுக்கு இந்த பதவி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி இன்று மாலை உதயநிதி பொறுப்பேற்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

அடுத்த செய்தி