ஆப்நகரம்

மாணவர்களுக்கு துரோகம் செய்யும் அதிமுக: திமுக போராட்டம் அறிவிப்பு!

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் அதிமுக அரசுக்கு எதிராக திமுக கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது

Samayam Tamil 22 Oct 2020, 10:06 pm
மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை அவர் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த விவகாரத்தில் ஆளுநர் வேண்டுமென்றே இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ளதாகவும் குற்றம் சாட்டப்படுவதுடன், ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வருகின்றன.
Samayam Tamil ஸ்டாலின்
ஸ்டாலின்


இதனிடையே, நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளதால், இந்த உள் ஒதுக்கீடு நடைமுறையை நடப்பாண்டிலேயே அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. தமிழக அமைச்சர்கள் 5 பேர் இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநரை சந்தித்து வலியுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதற்கு ஆளுநர் அளித்த பதிலில், மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதா மீது பல்வேறு கோணங்களில் ஆய்வு நடத்தி வருவதாகவும், அது தொடர்பாக முடிவெடுக்க 3 முதல் 4 வாரங்கள் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்ற ஆளுநரை திரும்ப பெறுக: திருமா கடிதம்

இந்த நிலையில், நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத முன்னுரிமை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு இனியும் கால அவகாசம் கோராமல், உடனே தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்கக் கோரியும், தமிழக ஆளுநருக்கு அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுக்கத் தவறி, மாணவர்களுக்குத் துரோகம் செய்யும் அதிமுக அரசைக் கண்டித்தும் வருகிற 24ஆம் தேதியன்று காலை 10 மணியளவில் ஆளுநர் மாளிகை முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது.

அடுத்த செய்தி