ஆப்நகரம்

இந்த ஒரு காரணம்தான்... உதயநிதிதான் அடுத்த தலைவர் - ராஜீவ் காந்தி விளக்கம்

உதயநிதி ஸ்டாலினுக்கு ஜனநாயகத்தின் படியே இளைஞரணி பதவி கொடுக்கப்பட்டதாக திமுக ராஜீவ் காந்தி விளக்கம் அளித்துள்ளார்.

Samayam Tamil 2 Dec 2022, 7:25 pm
திமுக மீது வாரிசு அரசியல் விமர்சனங்கள் அதிகமாக எழுந்து வருகிறது. கலைஞருக்கு பிறகு அவரது மகன் ஸ்டாலின் கட்சியின் தலைவரான போதும் இல்லாத விமர்சனம் தற்போது பீறிட்டு வ்ருவதற்கு உதயநிதிக்கு கொடுக்கப்பட்டு வரும் அங்கீகாரம்தான் காரணம். கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு உதயநிதிக்கு இளைஞர் அணி செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. அதற்கு பிறகு சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி வேட்பாளராகவே உதயநிதி அத்தொகுதியில் நின்று வெற்றி பெற்றார்.
Samayam Tamil dmk rajiv gandhi
dmk rajiv gandhi


இந்த நிலையில் மீண்டும் உதயநிதிக்கு இளைஞர் அணி செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. ஆனால், அந்த பதவிக்கு யாருமே போட்டியிடவில்லை. மேலும், தனக்கு இளைஞர் அணி பதவி கொடுக்கப்பட்டது கூட செய்தியாளர்கள் சொன்ன பிறகுதான் தெரிய வருவதாக உதயநிதி ஸ்டாலின் பேட்டியில் கூறியது வேடிக்கையாக இருந்தது. கலைஞரின் மறைவுக்கு பிறகு திமுகவின் தலைவராக முக ஸ்டாலின் பொறுப்பேற்றார்.

கட்சியில் படிப்படியாக பல்வேறு பொறுப்புகளில் இருந்து வந்த ஸ்டாலின் தலைவர் பதவியில் பொறுப்பேற்றதற்கு எதிர்க்கட்சிகளும் வரவேற்றனர். வாரிசு அரசியல் என்ற விமர்சனத்தையும் பெரிதாக வைக்கவில்லை. ஆனால், வெறும் நியமன பதவியில் அரசியலுக்குள் வந்த உதயநிதி ஸ்டாலினை 'சின்னவர்' என்றும் அடுத்த தலைவர் என்றும் அனுபவம் வாய்ந்த அமைச்சர்கள் கூட புளங்காகிதம் அடைகின்றனர்.

இதுகுறித்து திமுகவின் மாணவரணி மாநில தலைவர் ராஜீவ் காந்தி வெளிப்படையாக விளக்கியுள்ளார். உதயநிதிக்கு பொறுப்பு கொடுத்திருப்பது வாரிசு அரசியலில் வராது. அது ஒரு உள்கட்சி ஜனநாயகம். ஒருவேளை உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியில் தோற்று இருந்தால் மக்களை அவரது பதவியை ஏற்கவில்லை என்று ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், அவரை மக்கள் வெற்றி பெற செய்துள்ளனர். அவரது பதவியை மக்கள் ஏற்றதாகவே பார்க்க வேண்டும். உதயநிதியை நாங்கள் கொண்டாட காரணம் எங்களுக்கு ஒரு தலைவர் தேவை படுகிறார்.

அதுவும் திமுக குடும்பத்தில் இருந்து ஒரு தலைவரைதான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். அது ஏன் என்றால், தமிழுக்காகவும், தமிழ் சமூகத்துக்காகவும் நேர்மையோடும், திராணியோடும் இருந்தவர் கலைஞர். சமூக நீதி பெரியாரோடும், அண்ணாவோடும் ஒழிந்து விட்டது என்று பல பேர் கொண்டாடினர். ஆனால், கலைஞர் சாகும் வரை அதற்காக போராடினார். கலைஞர் மரணத்தை பார்ப்பனர்கள் மட்டுமல்லாமல் உயர் சாதியில் இருப்பவர்களும்கூட கொண்டாடினர். ஆகையால் கலைஞர் வழியில் அவரது குடும்பத்தில் இருந்து ஒரு தலைவர் வந்தால் என்ன தவறு? என்று ராஜீவ் காந்தி இவ்வாறு கூறினார்.

அடுத்த செய்தி