ஆப்நகரம்

போக்குவரத்து துறையை சீரமைப்பது தொடா்பாக ஸ்டாலினிடம் அறிக்கை சமா்பிப்பு

நட்டத்தில் இயங்கிவருவதாக தொிவிக்கப்படும் அரசு போக்குவரத்துக் கழகத்தை சீரமைப்பது தொடா்பாக தி.மு.க. குழு அறிக்கை ஒன்றை தயாாித்து கட்சியின் செயல்தலைவா் ஸ்டாலினிடம் அதை வழங்கியது.

Samayam Tamil 12 Feb 2018, 1:09 pm
நட்டத்தில் இயங்கிவருவதாக தொிவிக்கப்படும் அரசு போக்குவரத்துக் கழகத்தை சீரமைப்பது தொடா்பாக தி.மு.க. குழு அறிக்கை ஒன்றை தயாாித்து கட்சியின் செயல்தலைவா் ஸ்டாலினிடம் அதை வழங்கியது.
Samayam Tamil dmk researchers submit the report against transport loss
போக்குவரத்து துறையை சீரமைப்பது தொடா்பாக ஸ்டாலினிடம் அறிக்கை சமா்பிப்பு


அரசு போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கான ஊதிய உயா்வு பேச்சுவாா்த்தை மற்றும் பிடித்தம் செய்யப்பட்ட நிலுவை தொகையை வழங்குவது தொடா்பாக நடைபெற்ற பேச்சுவாா்த்தை தோல்வியடைந்தது. இதனைத் தொடா்ந்து போக்குவரத்துக் கழக பணியாளா்கள் கடந்த ஜனவாி மாதம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இருப்பினும் போக்குவரத்துக் கழகம் 7 ஆயிரம் கோடி ரூபாய் நட்டத்தில் இயங்கி வருவதால் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க முடியாது என்று அரசு தொிவித்தது. இதனையடுத்து நீதிமன்ற தலையீட்டின் அடிப்படையில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஊதிய உயா்வு தொடா்பாக பேச்சுவா்ாத்தை நடத்த குழு அமைக்கப்படும் என்ற கருத்தைத் தொடா்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

போக்குவரத்துக்கழக நட்டத்தை சாி செய்வது தொடா்பாக தி.மு.க. சாா்பில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் டி.ஆா். பாலு, கே.என்.நேரு, பொன்முடி, தொ.மு.ச. சண்முகம், செங்குட்டுவன் உள்ளிட்டோா் இடம் பெற்றிருந்தனா். இவா்கள் ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை தயாாித்தனா். தற்போது அந்த அறிக்கையை தி.மு.க. செயல் தலைவா் ஸ்டாலினிடம் குழுவினா் வழங்கினா். அந்த அறிக்கையை அளித்துள்ளனா். ஸ்டாலின் அந்த அறிக்கையை முதல்வாின் கவனத்திற்கு கொண்டு செல்வாா் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி