ஆப்நகரம்

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா : அதிமுகவுக்கு எதிராக ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி முடிவு !!

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிறைவேற பாஜகவுக்கு அதிமுக ஆதரவளித்துள்ளதற்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 12 Dec 2019, 9:45 pm
குடியுரிமை சட்டத் திருத்த மசோதா விஷயத்தில், மத்திய பாஜக அரசுக்கு அதிமுக பகிரங்கமாக ஆதரவு அளித்துள்ளதற்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil குடியுரிமை சட்டத் திருத்த மசோதா : அதிமுகவுக்கு எதிராக ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி முடிவு !!


குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் இந்த மசோதா நேற்று (புதன்கிழமை) நிறைவேறியது.

மத்தியில் ஆளும் பாஜகவுக்கு மக்களவையில் அசுர பலம் உள்ளதால், அங்கு இம்மசோதா நிறைவேற்றப்பட்டதில் வியப்பேதும் இல்லை. ஆனால், கூட்டணி கட்சிகளின் ஆதரவு இல்லாமல், மாநிலங்களவையில் இந்த மசோதாவை பாஜகவால் நிறைவேற்றியிருக்க முடியாது.

CAB Bill: அன்று திமுக செய்த பிழையை இன்று அதிமுக செய்கிறதா?

அதிமுக எம்பிக்கள், இந்த மசோதாவை ஆதரித்தும், சிவசேனைக் கட்சி எம்பிக்கள், வாக்கெடுப்பை புறக்கணித்து வெளிநடப்பு செய்ததும் தான், மாநிலங்களவை இந்த மசோதா நிறைவேற காரணமாக அமைந்துவிட்டது.

இதையடுத்து, இந்த மசோதா நிறைவேற காரணமான அதிமுக அரசை கண்டித்தும், சிறுபான்மையினருக்கு துரோகம் இழைக்கும் இம்மசோதாவை கொண்டு வந்துள்ள மத்திய பாஜக அரசை கண்டித்தும், திமுக சார்பில் மாநில அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) அறிவித்துள்ளார்.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா : வாக்கெடுப்பில் திமுக பங்கேற்றதா, இல்லையா?

இதுதொர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழர் விரோத, குடியுரிமை சட்டத் திருத்த மசோதா ( #CAB2019) வெற்றி பெறுவதற்கு மாநிலங்களவையில் அதிமுக ஆதரவளித்தது முக்கிய காரணமாகிவிட்டது.

பாஜக அரசின் சிறுபான்மையினர் - தமிழர் விரோத செயல்களுக்கு ஆதரவளிக்கும் தமிழின விரோத அதிமுக அரசைக் கண்டித்து, வரும் 17 ஆம் தேதி (டிசம்பர் 17) மாவட்டந்தோறும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களான மதச்சார்பின்மை, சமஉரிமை, சகோதரத்துவம், சுதந்திரம் உள்ளிட்ட அனைத்தையும், குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் மத்திய பாஜக அரசு தகர்த்துள்ளது.

பாஜகவுக்கு துணை நின்று, சிறுபான்மையினர், ஈழத்தமிழர்களுக்கு அதிமுக அரசு மன்னிக்க முடியாத துரோகம் செய்துள்ளது" என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி