ஆப்நகரம்

தமிழன் பிரசன்னா மனைவி தற்கொலை: போலீஸார் தீவிர விசாரணை!

திமுக செய்தித் தொடர்பாளர் தமிழன் பிரசன்னா மனைவி தற்கொலை செய்துகொண்டார்.

Samayam Tamil 8 Jun 2021, 1:38 pm
வழக்கறிஞரும் திமுக செய்தித் தொடர்பாளர்களில் ஒருவருமான தமிழன் பிரசன்னா தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் திமுக சார்பாக கலந்து கொண்டு வருகிறார்.
Samayam Tamil tamilan prasanna


சென்னை வியாசர்பாடியை அடுத்த எருக்கஞ்சேரி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இவரது மனைவி இன்று அவரது தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவல் தெரிந்ததும் கொடுங்கையூர் காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பியுள்ளனர். இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆகஸ்ட்டில் அதிமுகவில் பெரு வெடிப்பு? சசிகலா என்ட்ரிக்கு நாள் குறிச்சாச்சா!

தமிழன் பிரசன்னாவிடம் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. என்ன காரணத்துக்காக அவரது மனைவி இந்த முடிவை எடுத்தார் என விசாரணை நடைபெற்று வருகிறது.

உலகம் சுற்றிய மாஜிக்கள்: ஊழல் பட்டியல் ரெடி - முதலில் சிக்குவது யார்?

முதற்கட்ட விசாரணையில் குடும்பப் பிரச்சினை காரணமாகவே தமிழன் பிரசன்னா மனைவி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி