வேலூர் மாவட்டம், வள்ளிமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் பிரம்மோற்சவ விழா கடந்த 9 ஆம் தேதி துவங்கி 21 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. .தேர் திருவிழா முடிந்து நிலைக்கு வந்து தேர் நிலை நிறுத்தப்பட்டது. இன்று வள்ளியம்மை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் சுப்பிரமணிய சுவாமிக்கும் வள்ளிநாயகிக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் சீர்வரிசைகள் வைத்து மேளதாளங்கள் முழங்க கொண்டு வரப்பட்டு குரவர் சமுதாய மக்கள் பழங்குடியின மக்கள் மற்றும் மலைக்குரவர் பழங்குடியின மக்கள் திரளானோர் கலந்துகொண்டு இந்த திருமணத்தை நடத்தி வைத்தனர்.
இந்த திருமண விழாவில் சட்டமன்ற எதிர்க்கட்சிதுணை தலைவர் துரைமுருகனும் கலந்துகொண்டார். ஆயிரகணக்கான மக்கள் சாமிதரிசனம் செய்தனர். தேர் நிலைநிறுத்தப்பட்ட இடத்தில் தேங்காய்களை உடைத்து வழிபாடு நடத்தினார்கள். இதில் வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் திரளானோர் கலந்துகொண்டனர்
இந்த திருமண விழாவில் சட்டமன்ற எதிர்க்கட்சிதுணை தலைவர் துரைமுருகனும் கலந்துகொண்டார். ஆயிரகணக்கான மக்கள் சாமிதரிசனம் செய்தனர். தேர் நிலைநிறுத்தப்பட்ட இடத்தில் தேங்காய்களை உடைத்து வழிபாடு நடத்தினார்கள். இதில் வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் திரளானோர் கலந்துகொண்டனர்