ஆப்நகரம்

“தெலங்கானா சிஎம் சூப்பர், பழனிசாமி கூவத்தூர்காரர்” உதயநிதி ஸ்டாலின் சூசகம்!

அதிமுகவினரை கொந்தளிப்படைய செய்துள்ள உதயநிதி ட்வீட்...

Samayam Tamil 9 Jun 2020, 11:43 am
10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை நடத்துவது தொடர்பாகத் தமிழ்நாடு முதல்வர் பழனிசாமி எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி கடுமையாக விமர்சித்துள்ளார்.
Samayam Tamil “தெலங்கானா சிஎம் சூப்பர், பழனிசாமி கூவத்தூர்காரர்” உதயநிதி ஸ்டாலின் சூசகம்!
“தெலங்கானா சிஎம் சூப்பர், பழனிசாமி கூவத்தூர்காரர்” உதயநிதி ஸ்டாலின் சூசகம்!


தமிழ்நாட்டில் ஜூன் 10ஆம் தேதி தேர்வுகள் தொடங்கப்படும் என அறிவிப்பு வெளியானது. எனினும் தேர்வுகள் எப்போது நடக்க வேண்டும் என்பது தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் நடந்து வருகிறது.

அதே வேளையில் தெலங்கானாவில் 10ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் பொதுத் தேர்வு எழுதத் தேவையில்லை என்றும் அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் தெலங்கானா அமைச்சர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அறிவிப்பு நேற்று வெளியானது.

தெலங்கானா எடுத்துள்ள இந்த முடிவு நாட்டில் பலரின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நிறுத்த கோரி எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்!

இந்நிலையில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெலங்கானா முதல்வரையும் தமிழ்நாடு முதல்வரையும் ஒப்பிட்டு கடுமையான விமர்சனம் ஒன்றை முன்வைத்துள்ளார். உதயநிதி ட்விட்டரில், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கே மக்களின் வலியும் வேதனையும் புரியும்” எனக் கூறி இதற்கு தெலங்கானா முதல்வரே சாட்சி எனக் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் அந்த ட்வீட்டில், “காலை பிடித்து கோட்டைக்குள் நுழைய புது ரூட்டை கண்டுபிடித்தவர்கள், மக்கள் வழியை உணர முடியாது என்பதற்குத் தமிழ்நாடு முதல்வர் பழனிசாமியே சாட்சி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

உதயநிதியின் இந்த ட்வீட் அதிமுகவினரைக் கொந்தளிக்கச் செய்துள்ளது. அதே வேளையில், கொரோனா தாக்கம் உச்சத்திலிருக்கும் இந்த நேரத்தில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு வைத்துச் சோதிப்பது அவ்வளவு அவசியமா? என மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அடுத்த செய்தி