ஆப்நகரம்

எஸ்.எஸ்.சி தேர்வுகள் தமிழிலும் நடத்த வேண்டும்; மத்திய அரசுக்கு ஸ்டாலின் கடிதம்!

எஸ்.எஸ்.சி தேர்வுகளை தமிழிலும் நடத்த வேண்டுமென திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

TNN 19 Jan 2018, 3:37 pm
சென்னை: எஸ்.எஸ்.சி தேர்வுகளை தமிழிலும் நடத்த வேண்டுமென திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
Samayam Tamil dmk urges centre to conduct staff selection commission exams in tamil too
எஸ்.எஸ்.சி தேர்வுகள் தமிழிலும் நடத்த வேண்டும்; மத்திய அரசுக்கு ஸ்டாலின் கடிதம்!


இதுதொடர்பாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கிற்கு மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், மத்திய அரசின் தேர்வுகள் தமிழ் மற்றும் மாநில மொழிகளில் இருக்குமாறு வடிவமைக்க வேண்டும்.

தற்போது ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் மட்டுமே வினாத்தாள்கள் உள்ளன. இதனால் லட்சக்கணக்கான தமிழக இளைஞர்களுக்கு அநீதி இழைக்கும் செயலை மத்திய அரசு செய்கிறது.

மேலும் வட இந்திய இளைஞர்கள் மட்டும், அதிக பயன்பெறும் சூழல் ஏற்படுகிறது. வட இந்திய இளைஞர்கள் தங்கள் தாய் மொழியான ஹிந்தியில் தேர்வு எழுதுவதன் மூலம், அதிக சலுகை பெற்றவர்களாக ஆகின்றனர்.

இதுபோன்ற சூழல்கள் மத்திய அரசுப் பணிகளில் தமிழக மாணவர்கள் மிக மிக குறைவான வாய்ப்புகளே ஏற்படுகின்றன.

இந்திய அரசியலமைப்பு சட்டம் 16ன் படி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் அனைத்து குடிமக்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதை மு.க.ஸ்டாலின் நினைவுப்படுத்தியுள்ளார்.

DMK urges Centre to conduct Staff Selection Commission exams in Tamil too.

அடுத்த செய்தி