ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிடக் கோரி தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என திமுக கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில், ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்த இறுதிக் கருத்தை தற்போது வரை மத்திய அரசு தெரிவிக்கவில்லை என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.
”தற்போது வரை மத்திய அரசு எந்த ஒரு உறுதியான முடிவையும் எடுக்கவில்லை. நெடுவாசல் போராட்டக் குழுவினர் தொடர்ந்து என்னை சந்தித்து, சட்டமன்றத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை வைத்துள்ளனர்.” என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவடைய இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருப்பதால், அதற்குள் தமிழக அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றி, அதனை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் எனவும் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
DMK wants TN govt to bring resolution against hydrocarbon project