ஆப்நகரம்

திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு அமல்: கனிமொழி

வரும் சட்டப்பேரவை தேர்தலில் வென்று திமுக ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று திமுக மாநிலங்களவை உறுப்பினரும், மகளிர் அணி செயலாளருமான கனிமொழி கூறியுள்ளார்

TNN 20 Mar 2016, 4:26 pm
சென்னை: வரும் சட்டப்பேரவை தேர்தலில் வென்று திமுக ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று திமுக மாநிலங்களவை உறுப்பினரும், மகளிர் அணி செயலாளருமான கனிமொழி கூறியுள்ளார்.
Samayam Tamil dmk will certainly impose liquor ban if we come to power kanimozhi
திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு அமல்: கனிமொழி


இன்று நெல்லை மாவட்டம் வெங்காடம்பட்டியில் மதுவுக்கு முற்றுப்புள்ளி என்ற தலைப்பில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் கனிமொழி கலந்து‌கொண்டார் அக்கூட்டத்தில் உரையாற்றிய கனிமொழி கூறியதாவது, "மதுவால் சீரழிந்து இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் குடிப்பதற்காகவே கொள்ளையடிக்கும் அவலநிலைக்கு தமிழகம் தள்ளப்படுகிறது.

தமிழக அமைச்சர்கள் மீது புகார்கள் வருவதும், தமிழக அரசின் தவறுகளை மறைப்பதற்காகவே அமைச்சர்கள் பலிகாடாக ஆக்கப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது. தமிழக முதல்வர் ஜெயலலிதா தான் அமைச்சர்களின் நிலை குறித்து தெளிவுபடுத்த வேண்டும்" என திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி