ஆப்நகரம்

ஹத்ராஸ் பெண்ணுக்கு நீதி கேட்டு திமுக மகளிரணி பேரணி!

ஹத்ராஸ் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு திமுக மகளிரணி ஆளுநர் மாளிகை நோக்கி நாளை பேரணி நடத்தவுள்ளனர்

Samayam Tamil 4 Oct 2020, 3:10 pm
உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் 19 வயதான பட்டியலினப் பெண் ஒருவர் ஆதிக்க சாதியை சேர்ந்த 4 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார். படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்று வந்த அப்பெண் பரிதாபமாக சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்தார். இதையடுத்து, இறுதிச் சடங்கிற்காக அப்பெண்ணின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்காமல் போலீசாரே எடுத்துச் சென்று அவசர அவசரமாக நள்ளிரவில் தகனம் செய்துள்ளனர்.
Samayam Tamil கனிமொழி
கனிமொழி


ஹத்ராஸ் பாலியல் விவகாரம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் என அனைத்து தரப்பினரும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து வருவதுடன், ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்துள்ளன. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வேண்டி டெல்லியில் உள்ள மகரிஷி வால்மிகி கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி, ஹத்ராஸ் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமைக்கு எதிராக இந்த நாட்டின் ஒவ்வொரு பெண்ணும் குரல் எழுப்ப வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், ஹத்ராஸ் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு திமுக மகளிரணி செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி தலைமையில் அக்கட்சியினர் நாளை மாலை பேரணியாக சென்று மனு அளிக்கவுள்ளனர்.

ஹத்ராஸ் பெண்ணுக்காக ஒவ்வொரு பெண்ணும் நீதி கேட்க வேண்டும்: பிரியங்கா பாய்ச்சல்!

உத்தரப்பிரதேச அரசு தனது தவறுகளைத் திருத்திக் கொண்டு, கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு நீதி வழங்க வேண்டும். இதனைச் செய்ய மத்திய அரசு, உத்தரப்பிரதேச மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும். இந்த உணர்வுகளை மத்திய அரசுக்குத் தமிழக ஆளுநர் எடுத்துச் சொல்ல வேண்டும். அதற்காகவே திமுக மகளிரணியினரின் ஒளியேந்தி அணிவக்கும் இந்தப் பேரணி நடத்தப்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாம் ஏற்றும் ஒளி, தவறுகளுக்கு எதிரானதை எரிக்கட்டும். இந்தியா முழுவதும் போராடும் மக்களுக்கு நம்பிக்கை ஏற்றட்டும் என்றும் ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி