ஆப்நகரம்

உள்ளாட்சித் தேர்தல்: திருச்சியை கைப்பற்றிய திமுக

திருச்சி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.

Samayam Tamil 3 Jan 2020, 9:23 am
ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி தற்போது வரை நீடித்துள்ளது. முடிவுகள் தொடர்ந்து வெளியாகி வந்தாலும் பல இடங்களில் முடிவுகளை அறிவிக்க தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் எதிர்க் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Samayam Tamil திருச்சியை கைப்பற்றிய திமுக


திருச்சி மாவட்டத்தின் முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் திமுக பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களிலும் திமுகவின் கையே ஓங்கியிருந்தது. மொத்தமுள்ள 241 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் திமுக கூட்டணி 152 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதில் திமுக 146 இடங்களிலும், காங்கிரஸ் 4 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

TN Local Body Polls Counting Live: 2வது நாளாக தொடரும் வாக்கு எண்ணிக்கை- லைவ் அப்டேட்ஸ்!

அதிமுக கூட்டணி 62 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. அதில் அதிமுக 51 இடங்களிலும், தேமுதிக 10, பாஜக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு: திமுக கூட்டணி போராட்டம்!

மாவட்ட கவுன்சிலர் இடங்களும் அதிகளவில் திமுகவசமாகியுள்ளது. மொத்தமுள்ள 24 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் திமுக கூட்டணி 19 இடங்களிலும், அதிமுக கூட்டணி 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

கணக்கைத் துவங்கிய நா.த.க... ஒன்றிய செயலாளராக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வெற்றி...

மாவட்ட சேர்மன், ஒன்றிய சேர்மன் ஆகியோரைத் தேர்ந்தெடுக்க திமுகவிடமே பெரும்பான்மை இருக்கின்றதால் திருச்சியில் அனைத்து முக்கிய பதவிகளும் திமுக பக்கமே வரவுள்ளது.

அடுத்த செய்தி