ஆப்நகரம்

பிணை கைதிகளாக அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் : ஸ்டாலின்!

அ.தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர், அதனால் சட்டசபையில் சுதந்திரமான வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

TOI Contributor 9 Feb 2017, 12:33 pm
சென்னை: அ.தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர், அதனால் சட்டசபையில் சுதந்திரமான வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
Samayam Tamil dmk working president and opposition party leader mk stalin has urged to governor for the free floor test in assembly
பிணை கைதிகளாக அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் : ஸ்டாலின்!


இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தின் அரசியல் சூழல் நிலையற்ற தன்மையுடன் ஜனநாயக மாண்புகளுக்கு எதிராக உள்ளது. பொறுப்பு ஆளுநர் வருகையும் அவர் மேற்கொள்ள உள்ள நடவடிக்கையும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. முதலமைச்சராக நீடிக்கும் ஒ.பன்னீர்செல்வம் அவர்கள் தன்னிடம் கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதம் வாங்கினார்கள் என தனது கட்சித்தலைமையின் மீது பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளனார்.

ஆனால் அவரது ராஜினாமா ஆளுநர் அவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது. இந்நிலையில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போது எந்தத் தலைமையின் கீழ் இருக்கிறார்கள் என தெரியவில்லை. அவர்கள் சொகுசு பேருந்துகளில் ஏற்றிச் சென்று, நட்சத்திர விடுதிகளில் தங்க வைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சுதந்திர ஜனநாயக நாட்டின் மக்கள் பிரதிநிதிகள் இப்படி ‘பிணைக் கைதி'கள் போல சிறைப்படுத்தப்பட்டிருப்பது மக்களாட்சியின் மாண்பை சிதைக்கின்ற செயலாக உள்ளது. ஆளுங்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்ற திரு. வைகுண்டம், திரு.சண்முகநாதன் ஆகியோர் முதலமைச்சரை சந்தித்து அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

உண்மையாகவே இவர்கள் யாரை ஆதரிக்கிறார்கள் என்பது சந்தேகத்திற்குரியதாக இருக்கிறது. பிணைக் கைதிகளாக சிறைப்பிடிக்கப்பட்டுள்ள ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் பலரின் உண்மையான ஆதரவு யாருக்கு என்பது வெளிப்படையாக தெரியாத நிலை நிலவுகிறது.

இத்தகைய சூழலில், தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் அவர்கள் மாநிலத்தில் நிலையான சுதந்திரமான சட்டப்பூர்வமான ஆட்சியை நிலைநாட்ட வேண்டிய கடமை பொறுப்பில் இருக்கிறார். ஆகவே ஆளுநர் அவர்கள் அரசியல் சட்டம், எஸ்.ஆர் பொம்மை வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் வழிகாட்டுதல் அடிப்படையில், உரிய முடிவுகளை எடுத்து சுதந்திரமான சட்டமன்ற வாக்கெடுப்பை உறுதி செய்து ஜனநாயக மாண்புகளை காத்திடுமாறு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.


DMK working president and Opposition party leader MK Stalin has urged to Governor for the free floor-test in Assembly.

அடுத்த செய்தி