ஆப்நகரம்

தி.மு.க., நிர்வாகிகளை கடுமையாக எச்சரித்த ஸ்டாலின்!

பூத் கமிட்டிக்கு, போலி உறுப்பினர்களை சேர்த்தால், நிர்வாகிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

Samayam Tamil 28 Feb 2018, 10:42 am
பூத் கமிட்டிக்கு, போலி உறுப்பினர்களை சேர்த்தால், நிர்வாகிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
Samayam Tamil dmk working president mk stalin gives strict warning to party members
தி.மு.க., நிர்வாகிகளை கடுமையாக எச்சரித்த ஸ்டாலின்!


சென்னை, அறிவாலயத்தில் மதுரை தெற்கு, வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம், நடந்தது.
அதில், பங்கேற்ற தி.மு.க.,வின் செயல் தலைவர் ஸ்டாலின் கூறுகையில்,’ தொகுதிகளின் பூத் கமிட்டிக்கு தேர்வு செய்யும், 20 பேரில் ஐந்து மகளிர் இடம் பெற வேண்டும். அனைவருக்கும் வாக்காளர்கள் அட்டை இருக்க வேண்டும். கட்சியின் விசுவாசிகள் மட்டுமே இதில் இடம் பெற வேண்டும்.

போலி உறுப்பினர்களை சேர்க்கக் கூடாது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கையின் போது, ஒரு பூத் கமிட்டிக்கு நியமிக்கப்பட்ட, 24 உறுப்பினர்களில், 11 ஓட்டுகள் தான் கிடைத்தது. மற்றவர்கள் விலை போய்விட்டனர். விலை போகும் உறுப்பினர்கள், போலி உறுப்பினர்களை நியமித்தால், நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

அ.தி.மு.க.,வில், எம்.எல்.ஏ.,க்களின் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில், தீர்ப்பு வெளியான பின் ஆட்சி கவிழும். தொடர்ந்து தேர்தல் வரும். அதில், தி.மு.க., வெல்லும்.

காவிரி மேலாண்மை விவகாரத்தில், சம்பந்தமே இல்லாமல், அமைச்சர், நிதின் கட்கரி கருத்து தெரிவிப்பதும் கண்டனத்துக்கு உரியது.’ என்றார்.

executive meeting under the leadership of M.K.Stalin at Arivalayam, Chennai.

அடுத்த செய்தி