ஆப்நகரம்

நம்பிக்கை வாக்கெடுப்பு: திமுக மனு மீது இன்று விசாரணை

நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்த திமுக-வின் மனு மீதான விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் இன்று மேற்கொள்ளவுள்ளது.

Samayam Tamil 22 Feb 2017, 8:39 am
சென்னை: நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்த திமுக-வின் மனு மீதான விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் இன்று மேற்கொள்ளவுள்ளது.
Samayam Tamil dmks plea on vote of confidence chennai hc will hear the plea today
நம்பிக்கை வாக்கெடுப்பு: திமுக மனு மீது இன்று விசாரணை


பெரும்பான்மையை நிரூபிக்கும் பொருட்டு தமிழக சட்டப்பேரவை கடந்த 18-ம் தேதி கூடியது. அப்போது ஏற்பட்ட கடும் அமளியில், எதிர்கட்சியினரின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு, அவர்களை வெளியேற்றி விட்டு, நம்பிக்கை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது.

அவையில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினின் சட்டை கிழிக்கப்பட்டது. மேலும், அவைக் காவலர்கள் போல் சீருடை அணிந்து காவல்துறையினர் பேரவையின் உள்ளே வந்ததாகவும், தாங்கள் தாக்கப்பட்டதாகவும் திமுக-வினர் குற்றம் சாட்டினர்.

அதேபோல், தீர்மானத்தை எடப்பாடி பழனிச்சாமி இரண்டு முறை முன்மொழிந்துள்ளார். எதிர்க்கட்சியினர் இல்லாமல் நம்பிக்கை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது எனவே அது செல்லாது என்றும் திமுக-வினர் குற்றம் சாட்டி வந்தனர்.

மேலும், தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பை செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக மனு அளித்துள்ளனர். இந்த மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டு அவசர வழக்காக நேற்று விசாரணைக்கு வரவிருந்தது. ஆனால், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்ற மறைந்த அல்டமாஸ் கபீருக்கு மாலை இரங்கல் கூட்டம் நடைபெறுவதால், இந்த வழக்கின் மீதான விசாரணை நாளை (இன்று) நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்த திமுக-வின் மனு மீதான விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் இன்று மேற்கொள்ளவுள்ளது.
DMK's plea on vote of confidence: Chennai HC will hear the plea today

அடுத்த செய்தி