ஆப்நகரம்

என்ன பாத்தா பூதம் மாதிரியா இருக்கு? நாராயணசாமி கடுப்பு

பிரதமர் நரேந்திர மோடி தன்னை பூதம் என்று நினைக்கிறாரா? என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

TNN 19 Nov 2017, 4:00 am
பிரதமர் நரேந்திர மோடி தன்னை பூதம் என்று நினைக்கிறாரா? என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
Samayam Tamil do i look like a devil narayanasamy asks pm modi
என்ன பாத்தா பூதம் மாதிரியா இருக்கு? நாராயணசாமி கடுப்பு


புதுச்சேரியில் சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநரிடமிருந்து அரசு நிர்வாகத்தில் ஆளுநர் தலையிடுவது என்ற தொற்றநோய் ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிர்வாகத்தில் தலையிட ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், தன்னை பிரதமர் மோடி தன்னை பூதம் என்று எண்ணுகிறாரோ என்று கேள்வி எழுப்பிய அவர், தமிழக முதலமைச்சரோ துணை முதலமைச்சரோ சந்திக்க விரும்பினால் நேரம் ஒதுக்கும் பிரதமர் தனக்கு மட்டும் நேரம் கொடுக்கவில்லை.

பிரதமரைச் சந்திக்க நேரம் கேட்டு மூன்று மாதங்களாகிவிட்டன. மற்ற அமைச்சர்கள் அனைவரையும் சந்திக்க முடிகிறது. ஆனால், பிரதமரை மட்டும் சந்திக்க முடியவில்லை என்று அவர் கூறினார்.

அடுத்த செய்தி