ஆப்நகரம்

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது தெரியுமா?

வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும் என வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 13 Oct 2020, 6:25 am
தமிழ்நாட்டின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் ஆறுகளுக்கு நீர் வர தென்மேற்கு பருவமழைதான் காரணமாக உள்ளது, மேலும் மேற்கு தொடர்ச்சி மழையை ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கும் தென்மேற்கு பருவமழை நல்ல மழைப் பொழிவைத்தரும்.
Samayam Tamil northeast monsoon


இருப்பினும் தமிழ்நாடு முழுமைக்கும் மழை தருவது வடகிழக்கு பருவமழைதான். ஏரி, குளங்கள் நிறைய, நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்க வடகிழக்கு பருவமழையே முக்கிய காரணம்.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கும். இந்நிலையில் பருவமழை தொடங்கும் தேதியை அறிவித்துள்ளார் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலசந்திரன். “பசிபிக் கடல் பகுதியில் லா நினோ நிகழ்வு நிகழ்ந்து வருகிறது. இதனால் தென்மேற்கு பருவகால நிலை தொடர்கிறது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் காலமானார்!

இதையடுத்து வங்கக் கடலில் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி தென்னிந்திய கடற்பரப்பை கடந்து செல்லும் வாய்ப்பு உருவாகி உள்ளது. வரும் அக்டோபர் 22ஆம் தேதி வரை மேற்கு காற்று வீசும், பின்னர் வரும் 25ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை துவங்கும்” என்று பாலசந்திரன் தெரிவித்தார்.

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் அரசு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

பேரறிவாளன் தந்தை கோவை மருத்துவமனையில் அனுமதி: அறுவை சிகிச்சை!

வருவாய்த்துறை, உள்ளாட்சித் துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட முக்கிய துறைகளின் அமைச்சர்கள், அதிகாரிகள், துணை முதல்வர், காவல் துறை அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.

அடுத்த செய்தி