ஆப்நகரம்

காவி அடி.. கழகத்தை அழி..: பாஜவை கண்டித்து ‘நமது எம்ஜிஆர்’ கவிதை

அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழ் நமது எம்.ஜி.ஆர். பாஜகவை கண்டித்து ‘காவி அடி.. கழகத்தை அழி..:’ என்ற தலைப்பில் கவிதை வெளியிட்டுள்ளது.

TNN 12 Aug 2017, 2:37 pm
சென்னை: அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழ் நமது எம்.ஜி.ஆர். பாஜகவை கண்டித்து ‘காவி அடி.. கழகத்தை அழி..:’ என்ற தலைப்பில் கவிதை வெளியிட்டுள்ளது.
Samayam Tamil doctor namathu mgr writes condemning bjp
காவி அடி.. கழகத்தை அழி..: பாஜவை கண்டித்து ‘நமது எம்ஜிஆர்’ கவிதை


கடந்த சில வாரங்களாகவே அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது எம்ஜிஆர், பாஜகவை விமர்சித்து கவிதை வெளியிட்டு வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் பலரும் பாஜகவுக்கு ஆதரவாக பேசி வரும் நிலையில் இன்று அந்த நாளிதழில் வெளியாகியுள்ள கவிதை கவிதை பாஜகவை அதிகம் சீண்டுவதாக அமைந்துள்ளது.

‘காவி அடி.. கழகத்தை அழி..:’ என்ற தலைப்பில் பிரசுரமாகியுள்ள அந்த கவிதை உத்தர்காண்ட், அருணாச்சல் பிரதேசம், மணிப்பூர், பீகார், கோவா என பல மாநிலங்களில் பாஜக பின்வாசல் வழியாக ஆட்சியைப் பிடித்துள்ளதாக விமர்சிக்கிறது.



மேலும், புதுச்சேரி, மணிப்பூரில் பாஜகவை சேர்ந்தவர்களை ஆளுநர்களாக நியமித்து தங்களுக்கு அரசியல் ஏஜெண்டுகள் போல செயல்பட வைத்துள்ளது. நீதித்துறை, வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம் போன்ற தன்னாட்சி அமைப்புகளை ஆட்டிப்படைத்து அவமதிப்புக்கு ஆளாக்கிவிட்டது. மோடியா? இந்த லேடியா? என்று சவால் விட்ட இயக்கத்தை மூன்று கூறுகளாக்கி இரட்டை இலை சின்னத்தை முடக்கியுள்ளது என அடுக்கடுக்கான விமர்சனங்களை கடுமையாக முன்வைக்கிறது நமது எம்ஜிஆர் நாளிதழ்.

அடுத்த செய்தி