ஆப்நகரம்

அரசுகள் சித்த மருத்துவத்தை கண்டுகொள்ளவில்லை: மருத்துவர். கு.சிவராமன்

சித்த மருத்துவ ஆராய்ச்சிகள் மேற்கொள்வதில் அரசு கவனம் செலுத்தவில்லை என்று மருத்துவர் கு.சிவராமன் சாடியுள்ளார்.

TNN 20 Oct 2017, 4:32 pm
சித்த மருத்துவ ஆராய்ச்சிகள் மேற்கொள்வதில் அரசு கவனம் செலுத்தவில்லை என்று மருத்துவர் கு.சிவராமன் சாடியுள்ளார்.
Samayam Tamil doctor sivaraman blames government on dengue issue
அரசுகள் சித்த மருத்துவத்தை கண்டுகொள்ளவில்லை: மருத்துவர். கு.சிவராமன்


டெங்கு காய்ச்சலால் 40 பேருக்கும் அதிகமானவர்கள் தமிழகத்தில் பலியாகியுள்ளனர். டெங்குவைத் தடுக்கும் நோக்கில் அரசு விநியோகிக்கும் நிலவேம்புக் கசாயம் டெங்கு குணப்படுத்துமான என்ற சர்ச்சையும் வலுவடைந்துள்ளது.

இந்நிலையில், நாளிதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள பிரபல சித்த மருத்துவர் கு.சிவராமன், 50 ஆண்டுகாலம் தமிழ் மொழியை வைத்து அரசியல் நடத்தியவர்கள் சித்த மருத்துவத்தை வளர்ப்பதற்கு என்ன செய்தார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், மத்திய அரசு ஆயுர் வேத மருத்துவத்துக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்கிறது என்றும் சித்த மருத்துவத்தை கண்டுகொள்ளவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

2006ஆம் ஆண்டில் சிக்குன் குனியா வந்தது, 2012 முதல் டெங்கு வந்திருக்கிறது. சித்த மருத்துவர்கள், நவீன மருத்துவர்கள் கொண்ட குழு பெரிய ஆய்வு தமிழகத்தில் நடத்தும். வரும் காலங்களில் சிக்குன் குனியா, டெங்கு போன்ற நோய்கள் வராமல் தடுக்கவும் வந்தால் என்ன செய்வது என்பதையும் மருத்துவர்கள் குழு அறிக்கையாக வெளியிடும் என்று தமிழக சுகாதாரத்துறை அறிவிக்குமா? என்றும் அவர் சவால் விடுத்துள்ளார்.

அடுத்த செய்தி