ஆப்நகரம்

நேர்கொண்ட பார்வை ஆனால் மாண்புமிகு முதல்வர்; சரியா பீலா ராஜேஷ்?

செய்தியாளார் சந்திப்பில் ஒவ்வொரு முறையும் மாண்புமிகு முதல்வர், மாண்புமிகு முதல்வர் அவர்களின் வழிகாட்டுதல்படி என்ற வார்த்தைகளை தொடர்ந்து கவனமாக பீலா ராஜேஷ் உபயோகித்து வருகிறார்

Samayam Tamil 13 Apr 2020, 7:38 pm
இந்தியாவின் உயர்ந்த ஆட்சிப் பணித்துறை அதிகாரி என்றால் அவர் ஐ.ஏ.எஸ். அதிகாரிதான். இந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், மத்திய அரசு, மாநில அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் தலைமை நிர்வாகப் பதவிகளை வகிக்கிறார்கள். சுருக்கமாக சொல்லப்போனால், அரசு இயந்திரத்தை தலைமையேற்று இயக்குபவர்கள் இவர்களே.
Samayam Tamil பீலா ராஜேஷ்
பீலா ராஜேஷ்


ஆட்சிக்கு வருபவர்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள். எனவே, அரசு அவ்வப்போது மாறும். ஆனால், அரசு இயந்திரம் மாறாது. அது, எப்போதும் நிலையாக இயங்கிக் கொண்டே இருக்கும். ஒரு அரசாங்கம் எடுக்கும் முடிவுகளை நடைமுறைப்படுத்துவதுதான் அரசு இயந்திரம். இந்த அரசு இயந்திரத்தை இயக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரி என்பவர் இந்திய சமூகத்தில் உயர்ந்த மதிப்பு பெற்றவராக திகழ்கிறார்.

அதற்கு ஏற்றவகையில், நடைமுறை உதாரணமாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் திகழ்ந்து வருகிறார் என கூறப்படுகிறது. இவர் நாள்தோறும் கொரோனா தொற்று குறித்த தகவல்களை தருவதன் மூலம் மக்களின் கவனத்தை சுகாதாரத் துறை செயலாளார் பீலா ராஜேஷ் ஈர்த்துள்ளார். இதனிடயே, அவரை விடுத்து நடுவில் இரண்டு நாட்கள் தலைமை செயலளார் நேரடியாக வந்து கொரோனா பாதிப்பு விவரங்களை கொடுத்தது, பீலா ராஜேஷ் இருட்டடிப்பு செய்யப்படுகிறாரா என்ற விமர்சனத்தை ஏற்படுத்தியது.

சற்று முன் பீலா ராஜேஷ்..! சென்னையில் 208 பேருக்கு கொரோனா...

இதையடுத்து, கொரோனா பாதிப்பு தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பை மீண்டும் பீலா ராஜேஷே நடத்தி வருகிறார். கேரளா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் முதல்வர்களே வந்து கொரோனா பாதிப்பு விவரங்களை தெரிவித்து வரும் நிலையில், தமிழகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் கூட செய்தியாளர்களை சந்திக்காமல் அரசு அதிகாரிகளை அனுப்பி செய்தியாளார் சந்திப்பை நடத்துவது குறித்து எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இது ஒருபுறமிருக்க, கொரோனா போன்ற பேரிடர் காலங்களில் மீடியாக்களை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சந்திப்பது வரவேற்கத்தக்கது. குறிப்பாக, செய்தியாளர் சந்திப்பை நடத்தித்தான் தரவுகளை தர வேண்டும் என்பதில்லை, அறிக்கைகளை வெளியிட்டு வாரம் ஒருமுறை கூட செய்தியாளர் சந்திப்பை நிகழ்த்தலாம். ஆனால், நாள்தோறும் சந்தித்து தரவுகளை அளிப்பது கூடுதல் வரவேற்பை பெற்றுள்ளது.

கொரோனா: மதுரையில் கண்காணிப்பில் இருந்தவர் மரணம்!

அந்த வகையில், உறுதியான மனப்பாங்குடன், நல்ல தகவல்தொடர்பை கொண்டிருக்கும் பீலா ராஜேஷ், தனது செய்தியாளார் சந்திப்பில் ஒவ்வொரு முறையும் மாண்புமிகு முதல்வர், மாண்புமிகு முதல்வர் அவர்களின் வழிகாட்டுதல்படி என்ற வார்த்தைகளை தொடர்ந்து கவனமாக உபயோகித்து வருகிறார்.

பொதுவாக, இதுபோன்ற வார்த்தை ஜாலங்களை அரசியல்வாதிகள், கட்சி நிர்வாகிகள் தங்களுடைய விசுவாசத்தை காண்பிக்க வேண்டும் என்பதற்காக பயன்படுத்துவது வழக்கம். ஆனால், உயர் பொறுப்பில் இருக்கும் பீலா ராஜேஷ் போன்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இதுபோன்ற வார்த்தைகளை உபயோகிப்பது அவர்களது பதவிக்கு சரியா என்ற கேள்விகள் பொதுமக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது.

அடுத்த செய்தி