ஆப்நகரம்

ஆதார் - வாக்காளர் அட்டை இணைக்க முடிந்தது காலக்கெடு.. இனி அடுத்து என்ன..? முக்கிய "அப்டேட்"

ஆதார் - வாக்காளர் அட்டை இணைப்பு குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு விளக்கம் அளித்துள்ளார்.

Samayam Tamil 4 Apr 2023, 6:54 pm
சென்னை: ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்திருக்கும் நிலையில், தலைமைத் தேர்தல் அதிகாரி இதுதொடர்பான முக்கிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
Samayam Tamil aadhaar voter id


இதுவரை தமிழகத்தில் 4.21 கோடி வாக்காளர்கள் தங்கள் ஆதார் எண்ணை, வாக்காளர் பட்டியலுடன் இணைக்க விண்ணப்பித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

வாக்காளர் பட்டியலில் இருந்து போலி வாக்காளர்கள், மரணமடைந்த வாக்காளர்கள் ஆகியோரை அடையாளம் கண்டு நீக்குவது தேர்தல் ஆணையத்துக்கு பெரும் சவாலாக இருந்து வந்தது. இதனால் தேர்தல் சமயங்களில் பல குளறுபடிகளும், குழப்பங்களும் அரங்கேறி வந்தன. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் விதமாக, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருந்தது.

ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம்..

அதன்படி, வாக்காளர் பதிவு அலுவலர்கள் ஒவ்வொரு வீடாக சென்று இதற்கான விண்ணப்பங்களை பெற்று வந்தனர். ஆதார் எண் விவரங்களை பெற பல்வேறு சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டது. அதேபோல, வாக்காளர்கள் தாமாகவே ஆன்லைன் மூலமாக ஆதார் எண்ணை அப்லோட் செய்யும் வசதியும் வழங்கப்பட்டது. அதன்படி, www.nsvp.in என்ற இணையதளம் வழியாகவும், voter Help line என்ற செயலி வழியாகவும் ஆதார் எண்ணை பதிவேற்ற வசதி செய்து தரப்பட்டது.
எடப்பாடி + துணிச்சல்.. திடீரென பாராட்டிய திருமாவளவன்.. "ரூட்டு மாறுதா".. உற்று கவனிக்கும் திமுக

கால அவகாசம் முடிந்தது

இதனிடையே, நடப்பாண்டு மார்ச் 31-ம் தேதியுடன் ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைப்பதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் முடிவடைந்தது. இந்த சூழலில், இந்த அவகாசம் அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவி வந்தது. இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.

4.21 கோடி வாக்காளர்கள்

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஆதார் எண்ணுடன் வாக்காளர் அட்டையை இணைப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பது தொடர்பாக எந்த அறிவிப்பையும் தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை. தமிழகத்தில் 68.75 சதவீதம் வாக்காளர்கள் ஆதார் இணைப்புக்கு விண்ணப்பித்து இருக்கிறார்கள். அதாவது, 6.20 கோடி வாக்காளர்களில் 4.21 கோடி வாக்காளர்கள் இதுவரை இதற்காக விண்ணப்பித்துள்ளனர்.
இதில் அதிகபட்சமாக அரியலூரில் 99 சதவீதமும், கள்ளக்குறிச்சியில் 93.91 சதவீதமும் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக சென்னையில் 32 சதவீதம் என பதிவாகியுள்ளது. ஆதார் - வாக்காளர் பட்டியல் இணைப்பு பணி இதுவரை தொடங்கப்படவில்லை. விண்ணப்பங்கள் மட்டுமே பெறப்பட்டிருக்கின்றன" என்றார் அவர்.

அடுத்த செய்தி