ஆப்நகரம்

உணவு தேடி வந்த நாய், பூனை, பறவைகளுக்கு விஷம் வைத்த நபர்கள்..! குன்னூரில் சோகம்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்பட்டிருந்த விஷம் கலந்த உணவுகளை சாப்பிட்டு நாய் உள்ளிட்ட விலங்குகள் இறந்துள்ள சம்பவம் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Samayam Tamil 11 May 2020, 2:58 pm
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அமல்படுத்தபட்டுள்ள ஊரடங்கில் வேலையிழந்து, தொழிலிழந்து, உணவிழந்து மக்கள் மட்டுமல்ல ஐந்து அறிவு ஜீவன்களும்தான். எத்தகனியோ இடங்களில் சமூக ஆர்வலர்கள், போலீஸ் காரர்கள், தன்னார்வலர்கள் தெருவில் உள்ள நாய்களுக்கு உணவு வழக்கை வருகின்றனர்.
Samayam Tamil குன்னூரில் நாய்களுக்கு விஷம்


இந்த சூழலில் நீலகிரி மாவட்டம் குன்னூர் ஓட்டுபட்டறை அருகே உள்ள குப்பைக்கிடங்கு அருகாமையில் 5 க்கும் மேற்பட்ட நாய்கள், பூனைகள், ஒரு காட்டுப்பன்றி மற்றும் காகம் என கூட்டமாக மயங்கி கிடப்பதை அப்பகுதி மக்கள் கண்டனர். பின்னர், இதுகுறித்து வனத்துறையினருக்கும், கால்நடை மருத்துவர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

அவர்கள் வந்து மயக்கத்தில் கிடந்த விலங்குகளுக்கு தண்ணீர் மற்றும் மருத்துவ உதவி வழங்கி அவைகளை காப்பாற்ற முயற்சித்துள்ளனர். எனினும் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து நாய்கள், பூனைகள், காட்டுப்பன்றி அனைத்தும் உயிரிழந்துள்ளன.

''ஜெயஸ்ரீயை'' எரித்துக் கொன்ற அதிமுகவினர் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்!

குப்பை கிடங்கில் கொட்டப்படும் உணவு கழிவுகளுக்காக இந்த விலங்குகள் பசியால் கூட்டம் கூட்டமாக வருவதை விரும்பாத சிலர் உணவில் விஷம் வைத்திருக்கலாம் என மருத்துவர்களும், அப்பகுதி மக்களும் தெரிவித்தனர். இதையடுத்து, அங்கிருந்த சில உணவு மாதிரிகளை எடுத்துக்கொண்ட மருத்துவர்கள், இறந்து போன விலங்குகளுக்கு பிரேத பரிசோதனை நடத்தவுள்ளனர்.

ஊருக்குள் உணவு கிடைக்காததால் குப்பைக்கு வந்த நாய்கள், பூனைகளை விஷம் வைத்து கொன் சம்பவம் செல்ல பிராணிகளை வளர்ப்பவர்களுக்கிடையே மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி