ஆப்நகரம்

துருக்கியில் உள்ள தமிழக மாணவர்கள் பாதுகாப்பாக உள்ளதாக ஜெ., அறிக்கை

துருக்கியில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காகச் சென்றுள்ள தமிழக மாணவர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்றும், அவர்களின் குடும்பத்தினர் கவலையோ, அச்சமோ கொள்ளத் தேவையில்லை என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

TNN 16 Jul 2016, 10:15 pm
துருக்கியில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காகச் சென்றுள்ள தமிழக மாணவர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்றும், அவர்களின் குடும்பத்தினர் கவலையோ, அச்சமோ கொள்ளத் தேவையில்லை என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
Samayam Tamil dont afraid of the tn students in turkey cm jayalalithaa
துருக்கியில் உள்ள தமிழக மாணவர்கள் பாதுகாப்பாக உள்ளதாக ஜெ., அறிக்கை


இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

பள்ளி அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் விதமாக, தமிழகம் உள்பட இந்தியா முழுவதிலும் இருந்து 148 மாணவர்கள் துருக்கி சென்றுள்ளனர். இவர்களில், தமிழகத்தில் இருந்து மட்டும் 11 மாணவர்கள் சென்றுள்ளனர்.

இந்நிலையில், துருக்கியில் இன்று ராணுவப் புரட்சி நடைபெற்றதாகவும், அதனை கடுமையாகப் போராடி, அந்நாட்டு அரசு முறியடித்துள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. இதனால், தமிழகப் பள்ளி மாணவர்களின் நிலை குறித்து, அவர்களின் குடும்பத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி தமிழக அரசு அதிகாரிகள், துருக்கியில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட மாணவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் எவ்வித அச்சமோ, கவலையோ கொள்ள வேண்டாம்.

சம்பந்தப்பட்ட மாணவர்கள், வரும் 18ம் தேதி துருக்கியில் நடைபெற உள்ள விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றபின், பாதுகாப்பாக நாடு திரும்புவர். இதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்கும்படியும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதலமைச்சர் ஜெயலலிதா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி