ஆப்நகரம்

திமுக ஓட்டு கேட்டு வராதீங்க: பழனியில் ஒட்டப்பட்ட போஸ்டரல் பரபரப்பு

இந்து மதத்தையும், இந்துக்களையும் அவமதிக்கும் கட்சிகளுக்கு வாக்களிக்க மாட்டோம் என்றும் அச்சிடப்பட்டு ஒட்டப்பட்டுள்ள நோட்டீஸ் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Samayam Tamil 29 Dec 2019, 6:01 pm
பழனி: திமுக, கூட்டணி கட்சியினர் வாக்கு கேட்டு வரவேண்டாம் என பழனி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஒஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil பழனியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்
பழனியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்


தமிழகட்தில் நெல்லை தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை என 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏணைய மாவட்டங்களுக்கு டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 9ஆம் தேதி தொடங்கி 16ஆம் தேதியுடன் முடைவடைந்தது. ஊராட்சித் தலைவர், ஊராட்சி உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் உள்ளிட்ட ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள், சுயேட்சைகள் என தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் 2, 31,890 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 18,570 பதவிகளுக்கான வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

எல்லாரையும் ஓரங்கட்டு நான் வறேன்?- பாஜகவிற்காக களமிறங்கிய கவுதமி!

இதனைத்தொடர்ந்து, 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த 27ஆம் தேதி நடைபெற்றது. அதில், 76.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. எஞ்சியுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இந்நிலையில், பழனி நகர் மற்றும் ஊராட்சி பகுதிகளில் உள்ள வீடுகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எங்கு, எத்தனை தொகுதிகளில்?- நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

அதில், இந்து மதத்தை அவமதிக்கும் திமுக, கூட்டணி கட்சியினர் வாக்கு கேட்டு வரவேண்டாம் என்றும், இந்து மதத்தையும், இந்துக்களையும் அவமதிக்கும் கட்சிகளுக்கு வாக்களிக்க மாட்டோம் என்றும் அச்சிடப்பட்டுள்ளது. பழனி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் வசிக்கும் வீட்டு உரிமையாளர்களிடம் அனுமதி பெற்று இந்து அமைப்பினர் சார்பில் இந்த நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது.

அடுத்த செய்தி