ஆப்நகரம்

முட்டை கொள்முதலையும் ஐடி ரெய்டையும் தொடர்புப்படுத்தக்கூடாது: அமைச்சர் ஜெயக்குமார்

முட்டை கொள்முதலையும் கிறிஸ்டி நிறுவனத்தின் மீதான ஐடி ரெய்டையும் தொடர்புப்படுத்தக்கூடாது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 12 Jul 2018, 1:20 pm
முட்டை கொள்முதலையும் கிறிஸ்டி நிறுவனத்தின் மீதான ஐடி ரெய்டையும் தொடர்புப்படுத்தக்கூடாது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil jayakumar



சென்னை ராயபுரத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தர். அப்போது அவர் பேசியதாவது: ‘சத்துணவு முட்டை விநியோகத்தில் வரி ஏய்ப்பு செய்ததாக கிறிஸ்டிநிறுவனத்தின் மீது ஐடி ரெய்டு நடைபெற்றது. ஆனால், முட்டை விநியோகத்தில் ஊழல் நடந்ததாக டிடிவி தினகரன் கூறியுள்ளார். இது அடிப்படை ஆதராமற்றது. முட்டை விநியோகிக்கும் நிறுவனத்தின் உரிமையாளர் வரி செலுத்தாமல் இருந்தால் வருமான வரிசோதனை நடக்கத்தான் செய்யும். இது இயல்பு தான். முட்டை கொள்முதலையும் வருமானவரிச் சோதனை நடப்பதையும் தொடர்புபடுத்தக்கூடது. விவசாயிகளின் நலன் பாதுகாக்கும் வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். இலங்கை சிறையில் வாடும் தமிழர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும் போதே, ஒரு வேளை மீனவர்கள் எல்லை தாண்டினால், அவர்களை துன்புறுத்தக்கூடாது, படகுகளை, வலைகளை சேதப்படுத்தக்கூடாது என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் இலங்கை அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. சிலைக்கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றப்படும் என்றுற உயர்நீதிமன்றத்தின் கருத்துக்கு உரிய பதில் அளிக்கப்படும்’.



இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

அடுத்த செய்தி