ஆப்நகரம்

மாணவி ஃபாத்திமா லத்திஃப் மரணம்: முதல் முறையாக அறிக்கை வெளியிட்ட ஐஐடி

காவல்துறை விசாரணை முடிவடையும் வரை எந்த ஒரு வதந்தியையும் பரப்ப வேண்டாம் என தற்கொலை செய்து கொண்ட மாணவி ஃபாத்திமா லத்திஃப் தொடர்பாக சென்னை ஐஐடி அறிக்கை வெளியிட்டுள்ளது

Samayam Tamil 15 Nov 2019, 5:32 pm
சென்னை: மாணவி ஃபாத்திமா லத்திஃப் தற்கொலை செய்து கொண்டதையடுத்து, அது தொடர்பாக சென்னை ஐஐடி நிர்வாகம் முதல் முறையாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
Samayam Tamil ஃபாத்திமா லத்திஃப்
ஃபாத்திமா லத்திஃப்


கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த மாணவி ஃபாத்திமா லத்திஃப் (18). சென்னை ஐஐடியில் எம்.ஏ ஹூமானிட்டிஸ் அண்ட் டெவலப்மெண்ட் ஸ்டடீஸ் (ஒருங்கிணைந்த) பாடப்பிரிவில் முதலாமாண்டு படித்து வந்த இவர், கடந்த வெள்ளிக்கிழமை இரவு தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஐ.ஐ.டி. மாணவி தற்கொலை.! சாட்சிகள் மறைக்கப்படுகிறதா.? சென்னைக்கு விரையும் பெற்றோர்..

அனைத்து தேர்வுகளிலும் முதலிடம் பிடிக்கும் ஃபாத்திமா, கடந்த மாதம் நடைபெற்ற இண்டர்னல் தேர்வில் ஒரே ஒரு பாடத்தில் மட்டும் குறைவான மதிப்பென் பெற்றதாகவும் அதனால் மன உளைச்சலில் இருந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல் வெளியானது.

ஆனால், மாணவியின் செல்போனில் பதியப்பட்ட சில குறிப்புகளை சுட்டிக்காட்டிபேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் தனது மகளுக்கு ஏற்படுத்திய மன உளைச்சல்தான் மரணத்துக்கு காரணம் என தற்கொலை செய்து கொண்ட மாணவி ஃபாத்திமாவின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக கேளர முதல்வர் பினராயி விஜயன், பிரதமர் மோடிக்கு மாணவியின் பெற்றோர் மனு அளித்துள்ளனர். அத்துடன், தமிழகம் வந்துள்ள மாணவியின் தந்தை, டிஜிபி மற்றும் முதல்வர் பழனிசாமியை சந்தித்து தனது மகளின் இறப்புக்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

திருச்சி மாணவி தற்கொலை வழக்கில் திருப்பம்: கல்லூரி மாணவிகள் சொல்வது என்ன?

இந்நிலையில், மாணவி ஃபாத்திமா லத்திஃப் மரணம் தொடர்பாக சென்னை ஐஐடி நிர்வாகம் முதல்முறையாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது: மாணவி ஃபாத்திமா லத்திஃப் மரணம் மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் சம்பவங்கள் மிகுந்த வேதனையளிக்கிறது. ஃபாத்திமா லத்திஃப்பின் மரணம் குறித்த செய்து ஐஐடி நிர்வாகத்துக்கு தெரிய வந்ததும் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு, அவர்களது விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டு வருகிறது. மாணவியின் மரணம் குறித்த நேர்மையான விசாரணைக்கு சட்டத்தின்படி தேவையான எதையும் வழங்க ஐஐடி நிர்வாகம் உறுதி பூண்டுள்ளது.

ஐஐடி அறிக்கை


எனினும், காவல்துறையின் விசாரணை முழுமையாக முடிவடைவதற்கு முன்பே ஐஐடி பேராசிரியர்கள், மாணவர்கள் பற்றி சமூக வலைதளங்கள் மற்றும் சில ஊடகங்களில் வெளியாகும் தகவல் அவர்கள் மட்டுமல்லாது, அவர்களது குடும்பத்தினரையும் கடுமையான மன வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது. அத்துடன் நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனமான சென்னை ஐஐடிக்கு இதனால் அவப்பெயர் ஏற்படுகிறது.

சிறந்த மாணவி ஃபாத்திமாவின் மரணத்தால் துயரத்தில் இருக்கும் நாங்கள், மாணவர்கள், பேராசிரியர்கள், ஊழியர்களின் சிறப்பான மன நிலை, உடல்நிலையை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். காவல்துறை விசாரணை முடிவடையும் வரை எந்த ஒரு வதந்தியையும் ஐஐடி குறித்து பரப்ப வேண்டாம் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி