ஆப்நகரம்

காவிரி பிரச்னையை இன மோதலாக மாற்ற வேண்டாம்; கனிமொழி வலியுறுத்தல்

காவிரி நீர் பிரச்னையை, இரு மாநில மக்களிடையேயான இன மோதலாக மாற்ற வேண்டாம் என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

TOI Contributor 12 Sep 2016, 5:21 pm
காவிரி நீர் பிரச்னையை, இரு மாநில மக்களிடையேயான இன மோதலாக மாற்ற வேண்டாம் என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
Samayam Tamil dont make cauvery issue into a communal violence kanimozhi mp
காவிரி பிரச்னையை இன மோதலாக மாற்ற வேண்டாம்; கனிமொழி வலியுறுத்தல்


தமிழகத்திற்கு நீர் வழங்குவதை எதிர்த்து, கர்நாடகாவில் பல்வேறு அமைப்புகளும் வன்முறையில் ஈடுபட தொடங்கியுள்ளன. இதேபோன்று, தமிழகத்திலும் கர்நாடக வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால், இரு மாநில மக்களிடையேயான பிரச்னையாக இது திசைதிரும்பியுள்ளது.

இந்நிலையில், திமுக எம்பி., கனிமொழி இதுபற்றி அதிருப்தி தெரிவித்துள்ளார். காவிரி பிரச்னையை, இரு மாநில மக்கள் இடையேயான இன ரீதியான, பிரிவினை விவகாரமாக மாற்ற வேண்டாம் என்றும், பொது பிரச்னையை இவ்வாறு பார்ப்பது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பேஸ்புக்கில் கருத்து தெரிவித்த காரணத்திற்காக, பெங்களூருவைச் சேர்ந்த தமிழ் இளைஞர் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த கனிமொழி, கருத்துரிமை கூட தமிழனுக்கு மறுக்கப்படுவதாக, வேதனை தெரிவித்தார்.

அடுத்த செய்தி