ஆப்நகரம்

தனி அமைப்புகள் தொடங்க வேண்டாம்: ஓபிஎஸ் வேண்டுகோள்

எனது பெயரில் அமைப்புகளோ, மன்றங்களோ தொடங்க வேண்டாம் என முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

TNN 21 May 2017, 4:02 pm
சென்னை: எனது பெயரில் அமைப்புகளோ, மன்றங்களோ தொடங்க வேண்டாம் என முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Samayam Tamil dont start separate organisation in my name ops
தனி அமைப்புகள் தொடங்க வேண்டாம்: ஓபிஎஸ் வேண்டுகோள்


தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணி என அதிமுக இரு அணிகளாக பிளவு கண்டுள்ளது. இரு அணிகள் இணைப்புக்கான பேச்சுவார்த்தைக்கு அஸ்திவாராம் போடப்பட்டும் பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கவில்லை.

இதனிடையே, பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அவரது பெயரில் பாசறைகள், அமைப்புகளை தொடங்கி வருகின்றனர். ஆனால், தனது பெயரில் மன்றங்கள் அமைப்பது தனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை என பன்னீர்செல்வம் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

எனது பெயரில் மன்றங்களை அமைத்து எனக்கு பெருமை சேர்ப்பதாக நினைத்து அந்நியபடுத்தி விடாதீர்கள் என வேண்டுகோள் விடுத்துள்ள பன்னீர்செல்வம், அதிமுகவில் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளும், மன்றங்களும் மட்டும்தான் செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
Don't start separate organisation in my name: OPS

அடுத்த செய்தி