ஆப்நகரம்

பொள்ளாச்சி விவகாரத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட வேண்டாம் - கமல்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தை அரசியல் ஆதாயத்திற்காக யாரும் ஊதி பெரிதாக்க வேண்டாம் என மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 12 Mar 2019, 5:31 pm
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தை அரசியல் ஆதாயத்திற்காக யாரும் ஊதி பெரிதாக்க வேண்டாம் என மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil Kamal Haasan


கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மாணவிகளிடம் பேஸ்புக் மூலம் நண்பர்களாக பழகி காதலிப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்து, அவர்களிடம் பணம் பறித்துள்ளனர். இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவங்களை வீடியோவும் எடுத்து உள்ளனர். இதில் சபரிராஜன் (வயது 25) திருநாவுக்கரசு (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கோவையில் இந்த கும்பலிடம் சிக்கி பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் காவல் நிலையம் சென்ற பின்னர்தான் இவ்விவகாரம் தொடர்பான அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி வருகிறது.

இந்த கொடூரக் கும்பல் 200-க்கும் அதிகமான பெண்களை காதல் என்ற வலையை வீசி கொடூரமான முறையில் நடத்தியதும், வீடியோ எடுத்ததும் தெரியவந்தது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தை அரசியல் ஆதாயத்திற்காக யாரும் ஊதி பெரிதாக்க வேண்டாம் என கமல்ஹாசன் கேட்டுக் கொண்டார். பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை தொடர்பாக மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை சம்பவத்தால், பொள்ளாச்சி மக்களிடையே பெரும் பதட்டம் நிலவி கொண்டிருப்பதாக குறிப்பிட்டார். காவல்துறை செய்ய வேண்டிய நடவடிக்கைகளை நிச்சயம் செய்யும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

அடுத்த செய்தி