ஆப்நகரம்

சகோதரி என்று கூறுவதை நிறுத்த வேண்டும்: திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்

தனது புகைப்படத்தையோ, பெயரையோ ஊடகங்களில் பயன்படுத்தக் கூடாது என்று சசிகலா தரப்பில் திவாகரனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Samayam Tamil 11 May 2018, 7:45 pm
தனது புகைப்படத்தையோ, பெயரையோ ஊடகங்களில் பயன்படுத்தக் கூடாது என்று சசிகலா தரப்பில் திவாகரனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
Samayam Tamil Sasikala


தினகரன், திவாகரன் இடையே கடுமையான கருத்து மோதல்கள் இருந்து வந்தன. ஒருவரை ஒருவா் மாறி மாறி கடுமையான வாா்த்தைகளால் விவாதித்து வந்தனா். இந்நிலையில் சசிகலா தரப்பில் அவரது வழக்கறிஞா் ராஜா செந்தூா் பாண்டியன் திவாகரனுக்கு ஒரு நோட்டீஸ் ஒன்றை அனுப்பி உள்ளாா்.

அந்த நோட்டீசில், உடன் பிறந்த சகோதரி சசிகலா என்று ஊடகங்கள் முன்பு தொடா்ந்து பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். மேலும் தனது பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தக் கூடாது என்று தொிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜெயலலிதா குறித்த பொய்யான தகவல்களை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டாா்கள்.

இந்த நோட்டீசை பெற்றுக் கொண்ட பின்னரும் திவாகரன் இதே நடவடிக்கைகளை தொடா்ந்தால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திவாகரன் யாரையோ திருப்தி படுத்தவே இது போன்று செயல்படுகிறாா். உடன்பிறந்த சகோதரி என்று உாிமை கோருவதை நிறுத்த வேண்டும் என்று அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி