ஆப்நகரம்

'பணத்திற்காக வாக்களிக்காதீர்'- சகாயம் ஐஏஎஸ் வேண்டுகோள்

வருகிற சட்டப்பேரவை தேர்தலில், தமிழக மக்கள் பணத்திற்காக வாக்களிக்க வேண்டாம், என சகாயம் ஐஏஎஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

TOI Contributor 5 Mar 2016, 8:07 pm
வருகிற சட்டப்பேரவை தேர்தலில், தமிழக மக்கள் பணத்திற்காக வாக்களிக்க வேண்டாம், என சகாயம் ஐஏஎஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
Samayam Tamil dont vote for money sagayam ias advises tn voters
'பணத்திற்காக வாக்களிக்காதீர்'- சகாயம் ஐஏஎஸ் வேண்டுகோள்


நாகர்கோவிலில் தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் பேசிய சகாயம் ஐஏஎஸ், ''யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கும் உரிமை வாக்காளர்களுக்கு உள்ளது. ஆனால் பணத்திற்காக மட்டும் வாக்களிக்க வேண்டாம்.

இந்திய தேர்தல் ஆணையம் நேர்மையாக தேர்தலை நடத்தி, பணநாயகத்தை வீழ்த்தி, ஜனநாயகத்தை நிலை நிறுத்தும். கிரானைட் முறைகேட்டில் உயர் நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்துள்ளேன்.தண்டனையை நீதி மன்றம் தான் முடிவு செய்ய வேண்டும்,'' எனத் தெரிவித்தார்.

அடுத்த செய்தி