ஆப்நகரம்

வரதட்சணை கொடுக்காததால் கணவா் இரண்டாவது திருமணம்: பாதிக்கப்பட்ட பெண் புகாா்

​கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 25 சவரன் வரதட்சணை வழங்காததால் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நபா் மீது மனைவி 2 வயது குழந்தையுடன் காவல் நிலையத்தில் புகாா்.

Samayam Tamil 8 May 2019, 8:34 pm
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 25 சவரன் வரதட்சணை வழங்காததால் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நபா் மீது மனைவி 2 வயது குழந்தையுடன் காவல் நிலையத்தில் புகாா்.
Samayam Tamil Gold


கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த சேத்துமடை கிராமத்தைச் சேர்ந்தவிவசாய கூலித்தொழிலாளி சின்னமுத்துவின் மகள் ஜெயப்பிரியாவுக்கும், திண்டுக்கல்லைச் சோ்ந்த ஆசைக்குமாருக்கும் கடந்த 2016ம் ஆண்டு இரு குடும்பத்தார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் இருவரும் திருப்பூர் மாவட்டம் செட்டிபாளையத்தில் ஓராண்டாக வாழ்ந்து வந்துள்ளனர். இதன்பின்னர் பெண் வீட்டாரிடம் 25 சவரன் நகை வரதட்சணையாக கேட்டு, தினமும் ஜெயப்பிரியாவை துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இருவருக்கும் 2 வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில் தொடா்ந்து வரதட்சணை கேட்டு கொடுமை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஆசைக்குமாருக்கு திருப்பூர் செட்டிபாளையத்தைச் ரஞ்சிதம் என்ற இளம் பெண்ணிற்கும் தகாத தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதன் பின்னர் ஆசை வார்த்தை கூறி ரஞ்சிதத்தை ஆசைக்குமார் இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.

இதற்கு ரஞ்சிதாவும் தெரிந்தே ஆசைக்குமாரை திருமணம் செய்ய சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது.

இத்திருமணத்திற்கு ஆசைக்குமாரின் தந்தை கோடங்கியும், தாய் வேடச்சியும், உடந்தையாக இருந்துள்ளனர். ஆசைக்குமாரின் முதல் மனைவியான என்னிடம் சட்டப்படி விவாகரத்து பெறாமலேயே இரண்டாவதாக மறுமணம் செய்துள்ளார். எனவ எனது கணவர் ஆசைக்குமார் மீதும், அவரை இரண்டாவதாக திருமணம் செய்யத் தூண்டிய அவரது குடும்பத்தார் மீதும் வரதட்சணை கொடுமை

மற்றும் சட்டத்திற்கு புறம்பாக இரண்டாவது திருமணம் செய்தல், குடும்ப வன்முறை உள்ளிட்ட வழக்குகளின் கீழ் கைது செய்யக்கோரி,ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அடுத்த செய்தி