ஆப்நகரம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: சிசிடிவி கேமிராக்கள் மூலமாகக் கண்காணிப்பு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் விதிமீறல்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என, சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டு, தீவிரமாகக் கண்காணிப்படுகிறது.

TOI Contributor 5 Feb 2017, 8:56 am
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் விதிமீறல்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என, சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டு, தீவிரமாகக் கண்காணிப்படுகிறது.
Samayam Tamil dozens of cctv cameras installed to monitor avaniapuram jallikattu
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: சிசிடிவி கேமிராக்கள் மூலமாகக் கண்காணிப்பு


தமிழக அரசு, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசரச் சட்டத்தை இயற்றிய நிலையில், தற்போது மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. இதன்ஒருபகுதியாக, மதுரை அவனியாபுரத்தில், 2 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் இன்று ஜல்லிக்கட்டு தொடங்கியுள்ளது.

இதில் பங்கேற்றுள்ள மாடுபிடி வீரர்கள், காளைகள் என அனைத்திற்கும் விதிமுறைகள் வகுக்கப்பட்டு, அவற்றின்படியே ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. எனினும், விதிமீறல்கள் எந்த வகையிலும் நடைபெறலாம் என்ற முன்னெச்சரிக்கை காரணமாக, போட்டி நடைபெறும் இடம் மற்றும் சுற்றுப் பகுதிகளில், சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டு, தீவிரமாகக் கண்காணிக்கப்படுகிறது.

இதற்காக, பிரத்யேக கட்டுப்பாட்டு அறையும் ஏற்படுத்தியுள்ளதாக, விழாக்குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.

Dozens of CCTV cameras installed to monitor Avaniapuram Jallikattu

அடுத்த செய்தி