ஆப்நகரம்

சிறுநீர் கழித்து குப்பை கொட்டி அசிங்கம்; மதுரை எய்ம்ஸ்-ல் இப்படியொரு உயர் பதவியாம்!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் உறுப்பினராக சுப்பையா சண்முகம் நியமிக்கப்பட்ட விஷயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 28 Oct 2020, 1:51 pm
பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்தவர் சுப்பையா சண்முகம். சென்னையில் வசிக்கும் இவர் மருத்துவராகவும் பணியாற்றி வருகிறார். இவரது அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 52 வயதான பெண்ணுடன் சுப்பையாவிற்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து அவர் வீட்டு வாசலில் சிறுநீர் கழித்தும், குப்பைகளை கொட்டியும் அநாகரிகமாக நடந்து கொண்டார். இதுபற்றி சம்பந்தப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்தார். இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சூழலில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் உறுப்பினராக சுப்பையா சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார்.
Samayam Tamil shanmugam subbaiah


இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஒரு பெண்ணிடம் அநாகரிகமாக நடந்து கொண்டவருக்கு இப்படி உயர் பதவிகளைக் கொடுத்து அழகு பார்க்கக் கூடாது என்று பலரும் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். இதுதொடர்பாக தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்கள் சமூக வலைதளங்களில் கொந்தளித்துள்ளனர்.

மக்களவை எம்.பி ரவிக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், பெண்ணை துன்புறுத்திய குற்றச் சாட்டில் வழக்கு பதியப்பட்டவர். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் உறுப்பினராக நியமனம். இது பெண்களை அவமதிப்பதில்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் போடும் உத்தரவு!

இதேபோல் எம்.பி மாணிக்கம் தாகூர் தனது ட்விட்டர் பக்கத்தில், விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியின் தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் உறுப்பினராக சுப்பையா சண்முகத்தை நியமித்திருப்பது, அவர் RSS உறுப்பினர் என்பதற்காகவா அல்லது பெண்மையை இழிவுபடுத்தியதற்காக கொடுக்கப்படும் பரிசா? இதுதான் மனு சாஸ்திரத்தின் வழி ஆட்சியோ? என்று குறிப்பிட்டுள்ளார்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டபட்டது. இதற்கான கட்டுமானப் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை. இந்த சூழலில் மருத்துவமனை தலைவர், உறுப்பினர்கள் தொடர்பாக மத்திய அரசு இன்று (அக்டோபர் 28) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அடுத்த செய்தி