ஆப்நகரம்

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப் போவதில்லை: அதிர்ச்சியளித்த சித்த மருத்துவர்!

கொரோனா வைரஸ் பாதிப்பிற்கான சிகிச்சை பணியில் இருந்து விலகுவதாக மருத்துவர் வீரபாபு சமயம் தமிழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 16 Sep 2020, 6:33 am
கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக ஏறத்தாழ 5,400 கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தவர் சித்த மருத்துவர் வீரபாபு. இந்நிலையில் இவர் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் இருந்து விலகுவதாக சமயம் தமிழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil covid19


கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்டறிய உலகம் முழுவதும் மருத்துவ வல்லுநர்கள் தீவிரமாக போராடி வருகின்றனர். தமிழ்நாட்டில் கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள கபசுர குடிநீர் குடிப்பதை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். கொரோனா தடுப்பு மையங்களிலும் கபசுர குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

சித்த மருத்துவம் மூலமும் கொரோனாவை எதிர்கொள்ள முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் வளசரவாக்கத்தில் உள்ள ஜவஹர் பொறியியல் கல்லூரியில் கொரோனாவுக்கான சித்த மருத்துவ சிகிச்சை முகாம் செயல்பட்டது. ஆயிரக்கணக்கானோர் அங்கு சிகிச்சை பெற்றனர்.

TN School Reopen: தமிழகப் பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் - இந்த வருஷம் செம ஈஸி போங்க!

தனியார் சித்த மருத்துவர் வீரபாபு இந்தப் பணிகளை மேற்கொள்ள அரசு அனுமதியளித்திருந்தது. இதற்கு அரசு மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

5400 கொரோனா தொற்றாளர்கள் இந்த மையத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்தனர். ஒருவர்கூட பலியாகவில்லை. இதனால் இந்த மையம் கவனம் பெற்றது. நடிகர் ரஜினிகாந்த் மருத்துவர் வீரபாபுவை பாராட்டிப் பேசினார்.

ஆனால் சிகிச்சைக்கு வந்தவர்களிடம் வீரபாபு பணம் வசூல் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

அக்டோபரில் பள்ளிகள் திறப்பா? தமிழக அரசு முடிவு இதுதான்!

இந்நிலையில் தொடர் பணியினால் ஏற்பட்டுள்ள உடல் சோர்வு காரணமாக சிகிச்சையளிக்கும் பணியிலிருந்து விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி