ஆப்நகரம்

குடிப்பது என்னோட தனிப்பட்ட விருப்பம்: ஆட்டோ டிரைவரிடம் பல்பு வாங்கிய பாஜக!!

செய்தியாளர்களிடம் தனது குடிப்பழக்கம் பற்றி தெரிவித்த தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு, ஆட்டோ டிரைவர் கதிர் பதிலடி கொடுத்துள்ளார்.

Samayam Tamil 19 Sep 2018, 2:32 pm
செய்தியாளர்களிடம் தனது குடிப்பழக்கம் பற்றி தெரிவித்த தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு, ஆட்டோ டிரைவர் கதிர் பதிலடி கொடுத்துள்ளார்.
Samayam Tamil குடிப்பது என்னோட தனிப்பட்ட விருப்பம்: ஆட்டோ டிரைவரிடம் பல்பு வாங்கிய பாஜக!!
குடிப்பது என்னோட தனிப்பட்ட விருப்பம்: ஆட்டோ டிரைவரிடம் பல்பு வாங்கிய பாஜக!!


கடந்த சில தினங்களுக்கு முன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் சென்னையில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், கேள்விகள் கேட்கப்பட்டன.

அந்த நேரத்தில், ஓரத்தில் நின்று கொண்டிருந்த ஆட்டோ டிரைவர் ஒருவர், பெட்ரோல் விலை உயர்வைப் பற்றி தமிழிசையிடம் கேள்வி எழுப்பினார். உடனே அங்கிருந்த பாஜகவினர், அவரைத் தாக்கி, அங்கிருந்து இழுத்துச் சென்றனர். தமிழக பாஜக தலைவர் முன்பே நடந்தேறிய இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. இதைத் தொடர்ந்து, இதுதொடர்பான வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலானது.

பிரச்சனை பூதாகரம் ஆவதை உணர்ந்த தமிழிசை, பாஜகவினரால் தாக்கப்பட்ட ஆட்டோ டிரைவர் கதிரின் வீட்டிற்கு தனது தொண்டர்களுடன் சென்றார். பின்னர், வீட்டிளிருந்தவர்களுக்கு இனிப்பு வழங்கி, கதிரின் உடல்நிலை குறித்து விசாரித்தார்.

அந்தச் சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பாஜகவினர் கதிரை அடிக்கவில்லை எனவும், அவருக்கு குடிப்பழக்கம் உள்ளது எனவும், அதற்கு தான் மருந்து தருவதாக கூறினேன் எனவும் தெரிவித்தார்.

இந்தப் பேட்டிக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஆட்டோ டிரைவர் கதிர், “குடிப்பது என்பது எனது தனிப்பட்ட விருப்பம். அதை தமிழிசை பொது இடத்தில் சொல்லி இருக்கக் கூடாது. நான் அதை பிரச்சனை செய்ய விரும்பவில்லை. எனக்கு பெட்ரோல் விலை குறைய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி