ஆப்நகரம்

நிஜத்தில் நடந்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படச் சம்பவம்; ராஜஸ்தான் சென்று அசத்திய தமிழக போலீஸ்!

தப்பி ஓடிய டிரக் ஓட்டுநரை, கும்மிடிபூண்டி போலீசார் கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 9 Aug 2018, 7:10 pm
சென்னை: தப்பி ஓடிய டிரக் ஓட்டுநரை, கும்மிடிபூண்டி போலீசார் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil arrest


ராஜஸ்தானைச் சேர்ந்த டிரக் ஓட்டுநர் அப்துல் சலீம்(68), டிரக் கிளீனர் பிரேம் சந்த்(38) இருவரும் தேவர் சிங் என்பவரிடம் வேலை பார்த்து வந்தனர். இந்த சூழலில் சலீமின் மகளுக்கு பணம் தேவைப்பட்டுள்ளது. இதையடுத்து டிரக் உரிமையாளர் தேவர் சிங்கிடம் ரூ.5,000 கேட்டுள்ளனர். ஆனால் அவர் தர மறுத்துள்ளார். இந்நிலையில் டிரக்கிற்குள் அமர்ந்திருந்த தேவர் சிங்கை, சலீம் மற்றும் பிரேம் ஆகிய இருவரும் கடுமையாக தாக்கியுள்ளனர்.

பின்னர் அவரைக் கீழே தள்ளி, உயிருடன் எரித்து கொலை செய்துள்ளனர். மேலும் அவரிடமிருந்து ரூ.42,000 பணத்தை திருடிக் கொண்டு, டிரக்குடன் தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவத்தில் டிரக் ஓட்டுநர் மற்றும் கிளீனர் மீது கும்மிடிபூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து கிளீனரைக் கைது செய்த நிலையில், ஓட்டுநரைக் கைது செய்ய முடியவில்லை.

இந்த சம்பவம் கடந்த 2000ஆம் ஆண்டு, கும்மிடிபூண்டு அருகே நிகழ்ந்துள்ளது. சமீபத்தில் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பரெண்டண்ட் ஆர்.பொன்னி நிலுவையில் உள்ள வழக்கை எடுத்துள்ளார். அவர் பிற அதிகாரிகளுடன் குற்றவாளியை பிடிக்க திட்டம் தீட்டியுள்ளார். இதையடுத்து காவல் ஆய்வாளர் ஜெயகுமார் மற்றும் துணை ஆய்வாளர் செந்தில் முருகன், சபாபதி ஆகியோர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

அவர்கள் ராஜஸ்தான் சென்று, சலீமின் சொந்த கிராமத்தில் அவரைக் கைது செய்தனர். அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த விசாரனையில் கொலை நிகழ்ந்த பிறகு, பல ஆண்டுகள் பாகிஸ்தான் எல்லை அருகே உள்ள கிராமத்தில் பதுங்கியிருந்தது தெரியவந்துள்ளது. பின்னர் தனது சொந்த கிராமத்திற்கு திரும்பி, போக்குவரத்து நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.

Driver arrested from Rajasthan 18 years after truck owner’s murder near Chennai.

அடுத்த செய்தி