ஆப்நகரம்

ஆளில்லாமல் ஓடிய ரயில் எஞ்சின்: பைக்கில் சென்று நிறுத்திய டிரைவர்!

ஆளில்லாமல் 13 கிமீ சென்ற ரயில் எஞ்சினை பைக்கில் துரத்திச் சென்று ஓட்டுனர் நிறுத்திய சம்பவம் அதிரிச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TNN & Agencies 9 Nov 2017, 5:45 pm
வாடி: ஆளில்லாமல் 13 கிமீ சென்ற ரயில் எஞ்சினை பைக்கில் துரத்திச் சென்று ஓட்டுனர் நிறுத்திய சம்பவம் அதிரிச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil driver chases rail engine in his bike and stopped
ஆளில்லாமல் ஓடிய ரயில் எஞ்சின்: பைக்கில் சென்று நிறுத்திய டிரைவர்!


சென்னையில் இருந்து மும்பை செல்லும் மும்பை மெயில் நேற்று மாலை 3 மணிக்கு வாடி ரயில் நிலையத்தை அடைந்தது. அதோடு மின்சாரத் தடம் முடிந்து அங்கிருந்து டீசல் எஞ்சின் ரயிலை இழுத்துச் செல்வது வழக்கம்.

அதனால் ரயில் பெட்டிகள் கழற்றப்பட்டு டீசல் எஞ்ஜினுடன் இணைக்கப்பட்டு சென்று விட்டது. ஆளில்லாமல் நிறுத்தப்பட்டிருந்த மின்சார எஞ்ஜின் திடீரென தானாக கிளம்பி சென்றுள்ளது.

அதை தாமதமாக கவனித்த எஞ்சின் டிரைவர் உடனடியாக பைக்கை எடுத்து எஞ்சினை துரத்திச் சென்றார். 20 நிமிடங்களுக்கு பின் 15 கி.மீ., தூரம் சென்ற ரயில் எஞ்சினில் ஏறி அதை டிரைவர் நிறுத்தினார்.

இந்த சம்பவம் நிகழ்ந்ததும் ரயில் நிலைய அதிகாரிகள் உடனடியாக அருகிலுள்ள அனைத்து ரயில் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்தனர். இதனால் அதே தடத்தில் எதிரே வந்த ரயில் வேறு தடத்துக்கு மாற்றப்பட்டது. இதனால் நடக்க இருந்த விபத்து தவிர்க்கப்பட்டது.

அடுத்த செய்தி