ஆப்நகரம்

பாதி வழியில் பஸ்சை நிறுத்தி ஓடிய டிரைவர்!

தேவதானப்பட்டி:கொடைக்கானல் சென்ற பேருந்தை பாதி வழியில் நிறுத்திவிட்டு டிரைவர் ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

TNN & Agencies 12 Sep 2017, 5:37 pm
தேவதானப்பட்டி:கொடைக்கானல் சென்ற பேருந்தை பாதி வழியில் நிறுத்திவிட்டு டிரைவர் ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Samayam Tamil driver stops the bus in half way and ran away
பாதி வழியில் பஸ்சை நிறுத்தி ஓடிய டிரைவர்!


திண்டுக்கல்லில் இருந்து கொடைக்கானலுக்கு நேற்று அரசு பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. அதில் ஏராளமானோர் பயணம் செய்தனர். பஸ் புறப்பட்டது முதலே டிரைவர் அதை தாறுமாறாக ஓட்டியதாக தெரிகிறது. இதையடுத்து பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

டிரைவரிடம் மிதமான வேகத்தில் பஸ்சை ஓட்டும்படி சில பயணிகள் கூறினர். ஆனால் டிரைவர் தொடர்ந்து தாறுமாறாகவே ஓட்டியதாக தெரிகிறது. தொடர்ந்து டிரைவரிடம் தொடர்ந்து பயணிகள் முறையிட, சாலையோரத்தில் பஸ்சை நிறுத்திவிட்டு டிரைவர் ஓடினார். பின் அவ்வழியாக சென்ற மற்றொரு அரசு பஸ்சில் ஏறி சென்று விட்டார். பின் கண்டக்டரிடம் முறையிட்ட பயணிகள், சுமார் 2 மணி நேரத்துக்கு பின் மாற்று டிரைவர் வந்து பஸ்சை இயக்கினார்.

இது குறித்து போக்குவரத்துத்துறை அதிகாரி ஒருவரிடம் விசாரித்த போது,’ டிரைவருக்கு உடல்நிலை சரி இல்லாமல் இருந்துள்ளது. பஸ்சை ஓட்டும்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
அதனால் அவர் பஸ்சை சாலையோரத்தில் நிறுத்தி உள்ளார். எதிரே வந்த மற்றொரு பஸ்சில் ஏறி வத்தலக்குண்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் சேர்ந்துள்ளதாக கூறினார்.


driver stops the bus in Half way and ran away

அடுத்த செய்தி