ஆப்நகரம்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உயிர்காக்கும் மருந்து தட்டுப்பாடு!

ஜூலை 1ஆம் தேதி ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் உயிர்காக்கும் மருந்துகளின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

TNN 6 Jul 2017, 1:01 pm
சென்னை : ஜூலை 1ஆம் தேதி ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் உயிர்காக்கும் மருந்துகளின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil drug shortage in several parts of tamil nadu
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உயிர்காக்கும் மருந்து தட்டுப்பாடு!


ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறது ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு சதவிகிதத்தில் வரி நிர்ணியிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜூலை 1க்கு முன்னால் வாங்கிய மருந்துகளுக்கு வரி நிர்ணயம் செய்வதில் தாமதம் ஏற்படுவதால் இந்த மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. டீலர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் அனைவரும் சாப்ட்வேர் உபயோகித்து பில் தயார் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் மருத்து விநியோகத்திலும் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் மருந்து தட்டுப்பாடு நிலவுகிறது.

சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள் மிகவும் சிரமப்படுவார்கள் என்று தீபம் மருத்துவமனையில் மருத்துவர் ரவி சங்கர் கூறியுள்ளார். அதனால் தங்களின் மருத்துவமனையில் அவசர கால மருந்துகள் அனைத்தும் இருப்பு உள்ளதாக அவர் கூறினார். அப்போலோ போன்ற பெரிய மருத்துவமனைகள் ஜூலை 1ஆம் தேதிக்கு முன்னரே மாறுபடும் வரிவிகிதம் குறித்து கணக்கிட்டு அதற்கேற்ப மருந்துகளுக்கு விலை நிர்ணயித்து தயாராகியுள்ளனர்.

ஆனால் சிறிய நகரம் மற்றும் கிராமப்புறங்களில் அவ்வாறு தயாராகவில்லை என்பதால் வரி கணக்கிடுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த நிலை இன்னும் சில தினங்களில் சரியாகிவிடும் என்று நம்பப்படுகிறது. மருந்து விற்பனையாளர்களும் ஏற்கனவே வாங்கிய மருந்துகளை விற்பதா அல்லது டீலர்களிடம் திரும்ப கொடுத்துவிடுவதா என்ற குழப்பத்தில் உள்ளனர்.

அடுத்த செய்தி