ஆப்நகரம்

தமிழிசையை தாக்க முயற்சி: குடிமகனுக்கு அடி உதை

செங்கல்பட்டு பொதுக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் தமிழிசை பேசிக்கொண்டிருந்த போது, திடீரென்று ஒருவர் அவரை தாக்க முற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 25 Jun 2018, 8:59 am
செங்கல்பட்டு பொதுக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் தமிழிசை பேசிக்கொண்டிருந்த போது, திடீரென்று ஒருவர் அவரை தாக்க முற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil tamiliai


காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் உள்ள சிங்கம்பெருமாள் கோயிலில் பாஜக சார்பில் நேற்று மாலை பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் மைக்கில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தில் இருந்த போதை ஆசாமி ஒருவர் தமிழிசையை தரக்குறைவாக திட்டிக்கொண்டே மேடை ஏறி அவரை தாக்க முற்பட்டார். இதைக்கண்டு சுதாரித்துக் கொண்ட பாஜகவினர், போதை குடிமகனை தடுத்து நிறுத்தி சராமாரியாக தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, தான் சில கட்சிகளை பற்றி விமர்சித்துக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்ததாகவும், தாக்க முயன்றதற்கான காரணம் தனக்கு தெரியவில்லை என்றும் கூறினார். மேலும், தனக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்று தெரிவித்த அவர், உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேணடும் என்றும் வலியுறுத்தினார்.

அடுத்த செய்தி