ஆப்நகரம்

சென்னையில் வடகிழக்கு மாநில இளைஞர்களை தாக்கும் வைரல் வீடியோ!!

சென்னையில் விடுதி நடத்தி வரும் கொரியாவைச் சேர்ந்த வான் ஜி மூன் வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த தனது பணியாளர்களை அலுவலகத்தில் வைத்து அடிக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து மூன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Samayam Tamil 13 Aug 2019, 5:25 pm
கொரியாவைச் சேர்ந்தவர் வான் ஜி மூன். இவர் சென்னையில் விடுதி நடத்தி வருகிறார். இதில் வடகிழக்கு மாநில இளைஞர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களை கேள்வி கேட்டு மூன் அடிக்கும் வீடியோ வெளியாகி தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கையில் நோட்டு ஒன்று வைத்துக் கொண்டு அவர்களை திட்டியவாறு அடிகிறார். ஆனால், அவர் என்ன கேட்கிறார் என்பது வீடியோவில் சரியாக பதிவாகவில்லை.
Samayam Tamil Korean


இந்த வீடியோவை வடகிழக்கு மாநில இளைஞர்கள் ஃபேஸ்புக்கில் வைரலாக்கி போலீசில் புகாரும் அளித்துள்ளனர். ஜிலியாங்ராங் மாணவர்கள் யூனியன் தலைவர் பவ்ஜட்லங்க் ஆர் பன்மேல் இந்த வீடியோவை தனது ஃபேஸ்புக்கில் கடந்த 8ஆம் தேதி பகிர்ந்துள்ளார். சென்னையில் பணிபுரியும் வடகிழக்கு மாநிலத்தவர்களுக்காக இந்த யூனியன் துவங்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ பகிரப்பட்டதில் இருந்து 1000த்துக்கும் மேற்பட்ட கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

நெல்லை வீரத் தம்பதிக்கு கெத்து ’சல்யூட்’ - நேரில் சந்தித்து போலீஸ் சூப்பிரண்டு செய்த செயல்!

பாதிக்கப்பட்ட அந்த இளைஞர்கள் இருவரும் நாகலாந்து மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். குடிபோதையில் இளைஞர்களை மூன் தாக்கியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மூன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இறந்து போன தாயின் உடலை குப்பையில் வீசிய மகன்; அதிர்ச்சி தரும் பின்னணி!

தங்களது முதலாளி அடிக்கடி இதுபோல் நடந்து கொள்வார் என்றும் பீர் பாட்டில் எண்ணிக்கையில் தவறு ஏற்பட்டதால் தங்களை மூன் தாக்கியதாகவும் அந்த இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

மதுரையில் தனியார் காப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை- நிர்வாகி கைது!

அடுத்த செய்தி