ஆப்நகரம்

மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த காவலர்!

குடி போதையில் காவலர் ஒருவர் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

TOI Contributor 20 Aug 2016, 1:31 pm
சென்னை : குடி போதையில் காவலர் ஒருவர் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
Samayam Tamil drunken police molested college in public place
மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த காவலர்!

கத்திப்பாரா மேம்பாலத்திற்கு கீழே இளைஞர் ஒருவர் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனை கவனித்த கேப் டிரைவர்கள் சிலர் அந்த பெண்ணை காப்பாற்றி அந்த இளைஞரை பிடித்து வைத்துள்ளனர். பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட நபர் காவலர் ஜெரால்டு கிப்ஸ் என்பது தெரியவந்துள்ளது. சட்டம், ஒழுங்கு பிரிவு ஆய்வாளரின் வாகன ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். மவுன்ட் காவல் நிலைய ரோந்து காலர் அங்கமுத்து சம்பவ இடத்திற்கு வந்த பின்னர், குற்றச்செயலில் ஈடுபட்டவர் காவலர் என்று அறிந்ததும் அவர் தப்பி செல்வதற்கு உதவியுள்ளார்.

இரண்டாவது முறையாக கேப் ஓட்டுநர்கள், தப்பி செல்ல முயன்ற காவலர் ஜெரால்டை துரத்தி பிடித்து தாக்குவதற்கு முயற்சி செய்துள்ளனர். மீண்டும் இப்பிரச்னையில் தலையிட்ட ரோந்து காவலர் அங்கமுத்து கேப் ஓட்டுநர்கள் சிலரை தாக்கியுள்ளார். இதனால் கேப் ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவலர் அங்கமுத்து ஜெரால்டை காப்பாற்ற முயற்சிப்பதாக டிரைவர்கள் குற்றம் சாட்டினர். காவலர் அங்கமுத்து, பாலத்திற்கு கீழே வாகனங்களை நிறுத்தக்கூடாது என்றும் அப்படி நிறுத்தினால் தீயிட்டு கொளுத்தி விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.

இதனையடுத்து “நண்பர்கள் மகிழுந்து ஓட்டுநர்கள் சங்கம்” சார்பில் கேப் ஓட்டுநர்கள் அனைவரும் இணைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த துணை காவல் ஆணையர் ஓட்டுநர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது ஓட்டுநரை அடித்த காவலர் அங்கமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஓட்டுநர்கள் கேட்டுக்கொண்டனர். மவுன்ட் காவல் நிலையத்திற்கு பேச்சு வார்த்தைக்கு அழைக்கப்பட்ட ஓட்டுநர்கள், சமாதான பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டத்தை கைவிட்டனர். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பில் எந்த புகாரும் கொடுக்கப்படவில்லை. காவலர் ஜெரால்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அடுத்த செய்தி