ஆப்நகரம்

பேருந்து உடன் பயங்கரமாக மோதிய கார்; கிருஷ்ணகிரி டி.எஸ்.பி பரிதாப பலி!

கார் விபத்தில் டி.எஸ்.பி அதிகாரி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

TNN 16 Dec 2017, 10:22 am
திருவண்ணாமலை: கார் விபத்தில் டி.எஸ்.பி அதிகாரி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil dsp dies as car collides with bus in tamil nadu
பேருந்து உடன் பயங்கரமாக மோதிய கார்; கிருஷ்ணகிரி டி.எஸ்.பி பரிதாப பலி!


கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தவர் பி.ஷண்முக சுந்தரம். இவர் சென்னையில் இருந்து கிருஷ்ணகிரிக்கு, நேற்று அதிகாலை 1.30 மணிக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

சுந்தரத்தின் நண்பர் சுதாகர் காரை ஓட்டிச் சென்றார். இவர் ஆய்வக உதவியாளராக ஒசூர் தனியார் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சுதாகர் அசந்த நிலையில், கார் கட்டுப்பாட்டை இழந்தது.

இதையடுத்து சென்னை சென்று கொண்டிருந்த பேருந்து மீது பயங்கரமாக மோதியது. இதில் முன்சீட்டில் அமர்ந்திருந்த சுந்தரம் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

காயமடைந்த சுதாகர் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பலியான சுந்தரத்தின் உடல் திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சுந்தரம், 1987ஆம் ஆண்டு அதிகாரி. இவருக்கு மனைவி ஞானசக்தி மற்றும் மகள் நிவேதிதா ஆகியோர் உள்ளனர். சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம்.

DSP dies as car collides with bus in Tamil Nadu.

அடுத்த செய்தி