ஆப்நகரம்

விஷ்ணுபிரியா கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்

நாமக்கல் டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

TNN 1 Jul 2016, 2:18 pm
நாமக்கல் டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil dsp vishnu priya sucide case transfered to cbi
விஷ்ணுபிரியா கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்


நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் டிஎஸ்பியாக பணியாற்றிய விஷ்ணுபிரியா,கடந்த ஆண்டு மர்மமான முறையில் வீட்டில் தூங்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார்.கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த விஷ்ணுபிரியா,அந்த வழக்கு தொடர்பாக உயர் போலிஸ் அதிகாரிகள் கொடுத்த அழுத்தத்தினால்தான் தற்கொலை செய்து கொண்டார் எனவும் குற்றம் சாட்டப்பட்டது.


தற்போது சிபிசிஐடியால் விசாரிக்கப்பட்டு வரும் இந்த வழக்கை,சிபிஐ விசாரிக்கக் கோரி விஷ்ணுபிரியாவின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,விஷ்ணுபிரியாவின் வழக்கை சிபிசிஐடியிலிருந்து சிபிஐக்கு மாற்றி இன்று உத்தரவிட்டது.மேலும் வழக்கு விசாரணையை மூன்று மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

அடுத்த செய்தி