ஆப்நகரம்

டி.எஸ்.பி.-க்கள் பணியிட மாற்றம்

தமிழக காவல் துணை கண்காணிப்பாளர்களை பணியிட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

TNN 23 Sep 2016, 10:56 pm
சென்னை: தமிழக காவல் துணை கண்காணிப்பாளர்களை பணியிட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
Samayam Tamil dsps transfered in tamilnadu
டி.எஸ்.பி.-க்கள் பணியிட மாற்றம்


கரூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் கருப்பையா ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கும், அரவக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளர் கீதாஞ்சலி கரூர் மாவட்ட குற்றப்பிரிவுக்கும், கடலூர் மாவட்டம் நெய்வேலி காவல் துணை கண்காணிப்பாளர் கலைச்செல்வன் அரவக்குறிச்சி துணை கண்காணிப்பாளராகவும், கரூர் நகர துணை கண்காணிப்பாளர் சி.பெரியய்யா திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு துணைக் கண்காணிப்பாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல், திண்டுக்கல் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கும்மராஜா கரூர் நகர துணைக் கண்காணிப்பாளராகவும், கரூர் மாவட்ட குற்றப்பிரிவு ஆவண (டிசிஆர்பி) ராமராஜ் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூருக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அடுத்த செய்தி